அருவங்காடு கார்டைட் தொழிற்சாலை தொழிலாளர்கள் உண்ணாவிரதப் போராட்டம்

நீலகிரி: குன்னுார் அருகே அருவங்காடு கார்டைட் தொழிற்சாலையில் உற்பத்தி இலக்கை அதிகப்படுத்தாத மத்திய அரசைக் கண்டித்து தொழிலாளர்கள் சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்பட்டது.

நீலகிரி: குன்னுார் அருகே அருவங்காடு கார்டைட் தொழிற்சாலையில் உற்பத்தி இலக்கை அதிகப்படுத்தாத மத்திய அரசைக் கண்டித்து தொழிலாளர்கள் சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்பட்டது.

இந்திய  ராணுவத்திற்கு உறுதுணையாக அகில இந்திய அளவில் 41 தளவாட தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இதில், 11 தொழிற்சாலைகள் வெடிமருந்துகளைத் தயாரித்து வருகின்றன. அவற்றில், அரவங்காடு வெடிமருந்து தொழிற்சாலையும் ஒன்றாகும். இந்தத்  தொழிற்சாலை 1904-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில், கடந்த மாதம் 21-ம் தேதி முதல் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட கூடுதல் வேலை நேரம் நிறுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி தொழிற்சாலையின் உற்பத்தி இலக்கு எதிர்வரும் செப்டம்பர் மாதம் வரை மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது.

1980-ம் ஆண்டில் இதே போன்று உற்பத்தி நிறுத்திவைப்பு சம்பவம் நடைபெற்றது. இதேபோல, தற்போது நடைபெறுமா என்ற அச்சம் தொழிலாளர்கள் மத்தியில் இருந்து வருகிறது. இங்கு உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் தரமானதாகவும், விலை குறைவாக கொடுத்தாலும் மத்திய அரசு உற்பத்தி இலக்கை அதிகரிக்கவில்லை என அவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். மேலும், நமது நாட்டில் பாதுகாப்பு தளவாடங்கள் 30 சதவீதங்கள் மட்டுமே உற்பத்தி செய்யப்படுகிறது. தற்போது 70 சதவிகிதம் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. பாரம்பரியமுள்ள இந்த தொழிற்சாலை  மத்திய அரசின் கொள்கையால் நலிவடையும் நிலை இருந்து வருகிறது.

இந்த நிலையில், மத்திய அரசின் இது போன்ற நடவடிக்கைகளைக் கண்டித்து அருவங்காடு தொழிற்சாலையில் பணியாற்றும் நிரந்தர மற்றும் ஒப்பந்த பணியாளர்களின் நலன் கருதி சி.எப்.எல்.யு., ஐ.என்.டி.யு.சி., கூட்டுக்குழு சார்பில் இன்று ஒரு நாள் அடையாள தர்ணா மற்றும் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்பட்டது. தொழிற்சாலை நுழைவாயில் முன்பு நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான தொழிலாளர்கள் மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகள்  ஏராளமானோர் கலந்து கொண்டனர். மேலும், இந்தப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், அருவங்காடு பகுதியில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன.



Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...