கோவை - கேரளா எல்லையில் நக்சல் தடுப்பு பிரிவு போலீசார் சோதனை

கோவை: தமிழக-கேரள எல்லையான ஆனைகட்டி பகுதி வழியாக மாவோயிஸ்ட் அமைப்பினர் ஊடுருவியுள்ளதாக கிடைத்த தகவலைத் தொடர்ந்து எல்லை பகுதியில் நக்சல் தடுப்பு பிரிவு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.

கோவை: தமிழக-கேரள எல்லையான ஆனைகட்டி பகுதி வழியாக மாவோயிஸ்ட் அமைப்பினர் ஊடுருவியுள்ளதாக கிடைத்த தகவலைத் தொடர்ந்து எல்லை பகுதியில் நக்சல் தடுப்பு பிரிவு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.



தமிழக கேரள எல்லையை ஒட்டியுள்ள வனப் பகுதிகளில் மாவோயிஸ்ட் நடமாட்டம் இருந்து வருகின்றது. இந்நிலையில், எல்லையோர பகுதிகளில் மாவோயிஸ்ட் அமைப்பினரின் புகைப்படங்கள் ஆங்காங்கே வைக்கப்பட்டு, இவர்கள் குறித்த தகவல் தெரிந்தால் உடனடியாக தெரிவிக்கும்படி அப்பகுதி மக்களுக்கு வேண்டுகோள்களும் விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மாவோயிஸ்ட் அமைப்பில் உள்ள பெண் மாவோயிஸ்ட் ஒருவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளதால் அவரை ஆனைகட்டி வழியாக கோவைக்கு சிகிச்சைக்கு அழைத்து வருவதாக நக்சல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.



இதனையடுத்து தமிழக கேரள எல்லைப் பகுதியான ஆனைகட்டி பகுதியில் நக்சல் தடுப்பு படையினர் இன்று மாலை திடீர் வாகன சோதனை நடத்தினர். ஆனைகட்டி வழியாக கோவைக்குள் மாவோயிஸ்ட் அமைப்பினர் ஊடுருவுவதை தடுக்க இந்த திடீர் சோதனையானது நடத்தப்படுவதாக சோதனையில் ஈடுபட்ட போலீசார் தெரிவித்தனர்.



இந்த திடீர், சோதனையால் தமிழக - கேரள எல்லையோரங்களில் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...