டாஸ்மாக் அமைக்காதீர்!: திருப்பூரில் மக்கள் மனு

திருப்பூர்: திருப்பூரில் பொதுமக்களுக்கு இடையூறாக திறக்கப்பட உள்ள டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் இன்று ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

திருப்பூர்: திருப்பூரில் பொதுமக்களுக்கு இடையூறாக திறக்கப்பட உள்ள டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் இன்று ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். 

திருப்பூர் - பல்லடம் சாலை நொச்சிப்பாளையம் பிரிவு பேருந்து நிறுத்தம் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் அதிகம் வந்து செல்லும் இடமாகும். அந்த பகுதியில் குடியிருப்புகளும் அதிகளவில் உள்ளது. 

இப்பகுதியில் ஏற்கனவே டாஸ்மாக் கடை உள்ள நிலையில் கூடுதலாக டாஸ்மாக் கடையை திறக்க உள்ளதாக தெரிகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி பொதுமக்கள் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். 

அதில், கூடுதலாக மதுக்கடை திறந்தால் பாதுகாப்பு தன்மையற்ற சூழல் உருவாகும் என்றும் குடிமகன்களால் அதிகளவில் தொந்தரவு ஏற்படும் என்றும், ஆகவே மதுக்கடை அமைக்கக் கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...