மாற்று இடம் வழங்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் நடைபாதை வியாபாரிகள் மனு

கோவை: கோவையில் நடைபாதையில் வியாபாரம் செய்து வருபவர்களுக்கு மாற்று இடம் வழங்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் நடைபாதை வியாபாரிகள் மனு அளித்தனர்.

கோவை: கோவையில் நடைபாதையில் வியாபாரம் செய்து வருபவர்களுக்கு மாற்று இடம் வழங்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் நடைபாதை வியாபாரிகள் மனு அளித்தனர். 

காந்திபுரம் பகுதியில் 125-க்கும் மேற்பட்ட நடைபாதை வியாபாரிகள் பல வருடங்களாக வியாபாரம் செய்து வந்தனர். மேம்பால பணிகள் துவங்கப்பட்டபோது அவர்களைக் காலி செய்யச் சொல்லி, மாற்று இடம் வழங்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, டாக்டர்.நஞ்சப்பா சலையில் 225 கடைகளும், பாரதியார் சாலையில் 85 கடைகளும், வின்செண்ட் சாலையில் 60 கடைகளும் ஒதுக்கப்பட்டது.

இந்த நிலையில், நஞ்சப்பா சாலையில் மட்டும் முறையாக ஒதுக்கீடு செய்யப்பட்டதாகவும், மீதமுள்ளவர்களுக்கு ஓதுக்கீடு செய்யாத காரணத்தால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.



பின்னர் அவர்கள் கூறுகையில், "20 ஆண்டு காலமாக நஞ்சப்பா சலையில் 125 கடைகள் செயல்பட்டு வந்தது. மாநகராட்சி நிர்வாகம் நிர்ணயம் செய்த வாடகையை செலுத்தி வந்துள்ளோம். 125 கடைகள் அப்புறப்படுத்தப்பட்டு, சிவானந்த காலனி பவர் ஹவுஸ் பகுதியில் ஒதுக்கப்பட்ட இடத்தில் ஒரு லட்சம் முதல் ரூ. 1.5 லட்சம் வரை செலவு செய்யப்பட்ட கடைகளை காவல் துறையினரும், மின்வாரிய அதிகாரிகள் அகற்றி விட்டனர். மேலும், மாநகராட்சி நிர்வாகம் நிரந்தர வியாபாரம் செய்திடவும், ஏற்கனவே கடைகள் அமைத்ததால் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடு செய்திட வேண்டும், இவ்வாறு அவர்கள் கூறுகின்றனர். 

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...