உதகை பேருந்து விபத்தில் உயிரிழந்த 9 பேரின் குடும்பத்திற்கு ரூ.40 லட்சம் நிவாரணம்

நீலகிரி: உதகையில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்த 9 பேரின் குடும்பத்தினருக்கு ரூ. 40 லட்சம் இழப்பீட்டை போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் வழங்கினார்.



நீலகிரி: உதகையில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்த 9 பேரின் குடும்பத்தினருக்கு ரூ. 40 லட்சம் இழப்பீட்டை போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் வழங்கினார்.

உதகை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில், உயிரிழந்தவர்களுக்கு ரூ. 2 லட்சம் முதலமைச்சர் நிவாரண நிதியும், போக்குவரத்துக் கழகம் சார்பில் 2 நபருக்கு ரூ. 2.50 லட்சமும், 7 நபருக்கு தலா ரூ. 5 லட்சம் ரூபாய் என மொத்தம் 9 பேருக்கு ரூ. 40 லட்சம் காப்பீடு மூலம் இன்று அமைச்சர் விஜயபாஸ்கர் வழங்கினார்.






பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், "முதலமைச்சர் நிவாரண நிதி மட்டுமின்றி, போக்குவரத்துக் கழகம் சார்பில் காப்பீடு மூலம் உடனே காயமடைந்தவர்களுக்கு நிதி உதவி அளிக்கும் முறை முதல் முறையாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அதில், உயிரிழந்தவர்களுக்கு ரூ. 2 லட்சம் முதலமைச்சர் நிவாரண நிதி தவிர, போக்குவரத்துக் கழகம் சார்பில் 2 நபருக்கு ரூ. 2.50 லட்சமும், 7 நபருக்கு தலா ரூ. 5 லட்சமும் என ரூ. 40 லட்சம் 9 பேருக்கு காப்பீடு மூலம் வழங்கப்பட்டுள்ளது.

மேலும், தரமில்லாத பேருந்துகள் இல்லை. போக்குவரத்து துறையின் நடவடிக்கையால் சாலை விபத்துகளும், உயிரிழப்புகளும் குறைந்துள்ளது. சாலைப் பாதுகாப்பிற்கு ரூ. 65 கோடி நிதி உயர்த்தி ஒதுக்கப்பட்டுள்ளது," என்றார். இதைத்தொடர்ந்து, பத்திரிக்கையாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்க மறுத்து அமைச்சர் விஜயபாஸ்கர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.

உதகை பேருந்து கவிழ்ந்த விபத்தில் கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்ட 18 பேரில் 3 பேர் உயிரிழந்த நிலையில், 6 பேர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி சென்றுவிட்டனர். 9 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


Video: Syed Abbas

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...