குடியிருப்புகளுக்குள் பரவிய பஞ்சுகள் அப்புறப்படுத்தல்: பங்கஜாமில்லில் பஞ்சுகள் வெளியேறாமல் இருக்க வலைகள் அமைப்பு

கோவை: கோவை அருகே பங்கஜாமில்லில் இருந்து பஞ்சுகள் வெளியேறியதாக ஊடகங்களில் செய்திகள் வெளியான நிலையில், குடியிருப்புகளுக்குள் பரவிக் கிடந்த பஞ்சுகள் அப்புறப்படுத்தப்பட்டன.

கோவை: கோவை அருகே பங்கஜாமில்லில் இருந்து பஞ்சுகள் வெளியேறியதாக ஊடகங்களில் செய்திகள் வெளியான நிலையில், குடியிருப்புகளுக்குள் பரவிக் கிடந்த பஞ்சுகள் அப்புறப்படுத்தப்பட்டன.



புலியகுளம் அருகே உள்ள பங்கஜாமில் பல வருடங்களாக இயங்கி வருகிறது. தேசிய பஞ்சாலைக்கழகத்தின் கீழ் இயங்கும் இந்த பஞ்சாலையில், 500-க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், கடந்த சில நாட்களாக பஞ்சாலையில் இருந்து வெளியேறிய பஞ்சுகள் பெரியார் நகர் பகுதி குடியிருப்புகளுக்குள் பரவியது. சாலையெங்கும் பனி போல படர்ந்திருந்த பஞ்சுகள், வீடுகள், மரங்கள் உள்ளிட்டவற்றிலும் படிந்தன.



மேலும், 50-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் பஞ்சு படர்ந்ததோடு, உணவு பொருட்கள், தண்ணீர் உள்ளிட்டவற்றிலும் கலந்ததால் உடல் நலக்குறைவு ஏற்படுமென பொதுமக்கள் அச்சமடைந்தனர். இந்தச் செய்தி நேற்று ஊடகங்களில் வெளியானது. இந்நிலையில், இன்று காலை முதல் பெரியார் நகரில் படர்ந்திருந்த பஞ்சுகளை அகற்றி தூய்மைப்படுத்தும் பணியில் பஞ்சாலை நிர்வாகத்தினர் ஈடுபட்டுள்ளனர்.



இது குறித்து பங்கஜாமில் அதிகாரிகள் கூறியதாவது:- மில்லில் இருந்து கழிவு பஞ்சுகள் எதுவும் வெளியேறவில்லை. நுண்ணிய பஞ்சு துகள்களை பிரித்தெடுக்கும் வலை கிழிந்ததால், நல்ல பஞ்சு வெளியேறியது. கிழிந்த வலை உடனடியாக சரி செய்யப்பட்டு பஞ்சு வெளியேறுவது தடுக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் இதுபோன்ற பிரச்சனை ஏற்படாமல் இருக்க வலையில் பில்டர்கள் பொருத்தப்பட்டு இருக்கிறது, இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.



Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...