நீலகிரி: கூடலூர்-பந்தலூர் வட்ட பொதுமக்கள் யானைகளிடம் இருந்து பாதுகாப்பாக இருக்க வேண்டி நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
நீலகிரி: கூடலூர்-பந்தலூர் வட்ட பொதுமக்கள் யானைகளிடம் இருந்து பாதுகாப்பாக இருக்க வேண்டி நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கூடலூர் வனக் கோட்டம், கூடலூர் மற்றும் பந்தலூர் வட்டங்களில் வசிக்கும் பொதுமக்களுக்கு மனித வனவிலங்கு மோதல்களை குறிப்பாக யானை தாக்குதலில் இருந்து கட்டுப்படுத்திக் கொள்ளவும், பொதுமக்களின் சொத்துக்களை பாதுகாக்கவும், உயிரிழப்பினை தவிர்க்கவும் கீழ்க்கண்ட வழிமுறைகளை கடைபிடிக்குமாறு அன்போடு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
* இரவு நேரங்களில் குறிப்பாக தற்போதைய மேகமூட்டமாக மற்றும் பனிக்காலங்களில் வெளியே நடமாடும் போது கையில் அவசியர் டார்ச்லைட் உபயோகிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
* முடிந்தவரை இந்த நேரத்தில் வீட்டை விட்டு வெளியே வருவதைத் தவிர்க்கவும்.
* மது அருந்தி விட்டு இருட்டு நேரத்தில் தனியே நடமாட வேண்டாம், அருகில் உள்ள வனப்பகுதிக்கும் செல்ல வேண்டாம்.
* வீட்டின் அருகில் வாழை, பலா, கரும்பு, பாக்கு போன்ற யானைகள் விரும்பி உண்ணும் தாவரங்கள் வளர்ப்பதை தவிர்க்கவும்.
* தற்போதுள்ள இம்மரங்களின் அருகில் இரவில் செல்ல வேண்டாம்.
* ஏற்கனவே அரசுத்துறைகள் மூலமாக அமைந்துள்ள வேலிகள், யானை தடுப்பு அகழிகளை சேதப்படுத்த வேண்டாம். யானை வழக்கமாக செல்லும் பாதையை வேலி அமைத்து அதன் பாதையை அடைக்கக் கூடாது.
* வன விலங்குகளுக்கு உணவளிக்கக் கூடாது. மேலும் உணவு கழிவுகளை பாதையில் போடக்கூடாது.
* வெளி ஊர்களுக்கு வேலைக்குச் சென்றாலோ உறவினர் வீட்டிற்குச் சென்றாலோ மாலை இருட்டுவதற்குள் வீடு திரும்புவது நல்லது. வீட்டின் அருகில் வன விலங்குகள் வந்தால் உடனடியாக வனத் துறைக்கு தகவல் தெரிவிக்கவும். குறிப்பாக அருகில் உள்ள பீட் வனக் காப்பாளருக்கு தகவல் தெரிவிக்கவும்.
தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள்
மாவட்ட வன அலுவலர் - 04262 - 261302
வனச்சரக அலுவலர் - கூடலூர், ஓவேலி - 9443523414
வனச்சரக அலுவலர் - பந்தலூர் - 9488520346
வனச்சரக அலுவலர் - பிதர்காடு - சேரம்பாடி - 8903771610
இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கூடலூர் வனக் கோட்டம், கூடலூர் மற்றும் பந்தலூர் வட்டங்களில் வசிக்கும் பொதுமக்களுக்கு மனித வனவிலங்கு மோதல்களை குறிப்பாக யானை தாக்குதலில் இருந்து கட்டுப்படுத்திக் கொள்ளவும், பொதுமக்களின் சொத்துக்களை பாதுகாக்கவும், உயிரிழப்பினை தவிர்க்கவும் கீழ்க்கண்ட வழிமுறைகளை கடைபிடிக்குமாறு அன்போடு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
* இரவு நேரங்களில் குறிப்பாக தற்போதைய மேகமூட்டமாக மற்றும் பனிக்காலங்களில் வெளியே நடமாடும் போது கையில் அவசியர் டார்ச்லைட் உபயோகிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
* முடிந்தவரை இந்த நேரத்தில் வீட்டை விட்டு வெளியே வருவதைத் தவிர்க்கவும்.
* மது அருந்தி விட்டு இருட்டு நேரத்தில் தனியே நடமாட வேண்டாம், அருகில் உள்ள வனப்பகுதிக்கும் செல்ல வேண்டாம்.
* வீட்டின் அருகில் வாழை, பலா, கரும்பு, பாக்கு போன்ற யானைகள் விரும்பி உண்ணும் தாவரங்கள் வளர்ப்பதை தவிர்க்கவும்.
* தற்போதுள்ள இம்மரங்களின் அருகில் இரவில் செல்ல வேண்டாம்.
* ஏற்கனவே அரசுத்துறைகள் மூலமாக அமைந்துள்ள வேலிகள், யானை தடுப்பு அகழிகளை சேதப்படுத்த வேண்டாம். யானை வழக்கமாக செல்லும் பாதையை வேலி அமைத்து அதன் பாதையை அடைக்கக் கூடாது.
* வன விலங்குகளுக்கு உணவளிக்கக் கூடாது. மேலும் உணவு கழிவுகளை பாதையில் போடக்கூடாது.
* வெளி ஊர்களுக்கு வேலைக்குச் சென்றாலோ உறவினர் வீட்டிற்குச் சென்றாலோ மாலை இருட்டுவதற்குள் வீடு திரும்புவது நல்லது. வீட்டின் அருகில் வன விலங்குகள் வந்தால் உடனடியாக வனத் துறைக்கு தகவல் தெரிவிக்கவும். குறிப்பாக அருகில் உள்ள பீட் வனக் காப்பாளருக்கு தகவல் தெரிவிக்கவும்.
தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள்
மாவட்ட வன அலுவலர் - 04262 - 261302
வனச்சரக அலுவலர் - கூடலூர், ஓவேலி - 9443523414
வனச்சரக அலுவலர் - பந்தலூர் - 9488520346
வனச்சரக அலுவலர் - பிதர்காடு - சேரம்பாடி - 8903771610
இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.