திருப்பூர்: பெட்ரோல், கியாஸ் விலை உயர்வை கண்டித்து, திருப்பூரில் மாட்டு வண்டியின் மீது இருசக்கர வாகனங்களை நிறுத்தி நிறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் தெருமுனை கூட்டம் நடத்தினர்.
திருப்பூர்: பெட்ரோல், கியாஸ் விலை உயர்வை கண்டித்து, திருப்பூரில் மாட்டு வண்டியின் மீது இருசக்கர வாகனங்களை நிறுத்தி நிறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் தெருமுனை கூட்டம் நடத்தினர்.

பெட்ரோல், டீசல் விலை உயர்வை தடுக்க வேண்டும், கியாஸ் சிலிண்டர் விலை உயர்வை திரும்ப பெற வேண்டும், மாநகராட்சி பகுதிகளில் குவிந்துள்ள குப்பைகளை அகற்றி, சுகாதாரத்தை பாதுகாக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூரில் நேற்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன கூட்டம் நேற்று நடந்தது.
கருவம்பாளையம், வெடத்தலாங்காடு பகுதியில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் பெட்ரோல், கியாஸ் விலை உயர்வைக் கண்டித்து, மாட்டு வண்டியின் மீது இருசக்கர வாகனங்களை நிறுத்தியும், உயரமான பெஞ்ச் மீது காலி கியாஸ் சிலிண்டரை வைத்து மாலையிட்டும் வைத்து எதிர்ப்பைத் தெரிவித்தனர்.
