கோவை: பலத்த மழை காரணமாக சிறுவாணிக்கு செல்லும் சாலையில் திடீர் மண் சரிவு ஏற்பட்டுள்ளது.
கோவை: பலத்த மழை காரணமாக சிறுவாணிக்கு செல்லும் சாலையில் திடீர் மண் சரிவு ஏற்பட்டுள்ளது.
பருவ மழை தொடங்கிய கடந்த சில நாட்களாக மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது.
சிறுவாணி
சாடிவயல்-சிறுவாணி சாலையிலிருந்து, சிறுவாணி அணைக்கு செல்ல சுமார் 15 கிலோ மீட்டர் தூரம் அடர்ந்த வனப்பகுதியாக உள்ளது.
சிறுவாணி அணைக்கு செல்ல 22 கொண்டை ஊசி வளைவுகளை தாண்டி செல்ல வேண்டும்.
ஆனால், இந்த அணைக்கு செல்ல பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஆதே நேரத்தில், சிறுவாணி அளவை தெரிந்துகொள்ள தினமும் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் அங்கு செல்வது வழக்கம்.
மழை காரணமாக அப்பகுதியில் அங்கங்கே மரங்கள் சாய்வதும், லேசான பாதிப்புகள் ஏற்படுவதுமாக இருந்து வந்தது.

இந்த நிலையில், நேற்று இரவு பெய்த கனமழையினால் 16 வது கொண்டை ஊசி வளைவில் மண் சரிவு ஏற்பட்டது. இந்த திடீர் மண் சரிவு காரணமாக சாலையே துண்டிக்கப்பட்டது.

இதனால், அதிகாரிகளுக்கு சிறுவாணி அணையின் கொள்ளளவை தெரிந்து கொள்ள முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
தற்போது மண் சரிவு ஏற்பட்டுள்ள அந்த பகுதியை சரி செய்யும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.