பசுமை வழி சாலைக்கு எதிரான கருத்து : நடிகர் மன்சூர் அலிகான் கைது

சென்னை: சேலம் - சென்னை இடையே புதிதாக அமைக்கப்பட இருக்கும் எட்டு வழி சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருத்து தெரிவித்ததால் நடிகர் மன்சூர் அலிகானை போலீசால் கைது செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை: சேலம் - சென்னை இடையே புதிதாக அமைக்கப்பட இருக்கும் எட்டு வழி சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருத்து தெரிவித்ததால் நடிகர் மன்சூர் அலிகானை போலீசால் கைது செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் - சென்னை இடைப்பட்ட தூரத்தில் எட்டு வழி சாலை (பசுமை வழி சாலை) அமைப்பதில் தமிழக அரசு தீவிரம் காட்டி வருகிறது. இதற்கு எதிரான கருத்துக்கள் எழுந்த போதிலும், சாலை அமைக்கப்படுவது உறுதி என்று தமிழக முதல்வர் கடந்த வாரம் சட்டப்பேரவையில் அறிவித்தார். 

பாதிப்பு

இந்த சாலை அமைக்கப்படும் போது பல ஆயிரக்கணக்காக விளை நிலங்கள் பாதிக்கப்படும் என்று கூறி எதிர்ப்பு தெரிவித்து, சாலைக்கான அறிவிப்பு வெளியான நாள் முதலே மக்கள் போராடி வருகிறார்கள். இதற்கு தமிழ் நடிகர்கள் சிலரும் குரல் கொடுத்திருந்தனர்.

அதேபோல், நடிகர் மன்சூர் அலிகான் சேலம் பசுமை வழிச்சாலை அமைக்க எதிராக கருத்து தெரிவித்து இருந்தார். இந்த சாலை முழுக்க முழுக்க மக்களுக்கு எதிரானது என்று குறிப்பிட்டார். இதனால் பல கோடி மரங்கள் தேவையில்லாமல் வெட்டப்படுகிறது. அரசு யாருக்கோ உதவி செய்ய இப்படி திட்டமிடுகிறது என்ற கருத்துக்களை முன் வைத்தார்.

இந்த நிலையில், சென்னை சூளைமேட்டில் வைத்து மன்சூர் அலிகானை போலீசார் கைது செய்தனர். சென்னை வந்த சேலம் போலீசார் அவரை கைது செய்து சேலம் சிறைக்கு அழைத்து சென்றுள்ளனர்.

சர்வாதிகாரம்

பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் அவ்வபோது பேசிவரும் பா.ஜ.க., தேசிய செயலாளர் எச்.ராஜா மீதும், பத்திரிக்கையாளர்களை தரக்குறைவாக விமர்சித்த நடிகர் எஸ்.வி.சேகர் மீதும் நடவடிக்கை எடுக்காத இந்த அரசு, மக்களுக்கு ஆதரவாக கருத்து கூறியதற்காக மன்சூர் அலிகானை கைது செய்திருப்பது சர்வாதிகாரப் போக்கு என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...