பயணிகளின் நெரிசலைத் தவிர்க்க சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிப்பு

பயணிகளின் கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் வகையில் இயக்கப்பட்ட எர்ணாகுளம் ரயில்நிலையம் - ஐதராபாத் வரையில் இயக்கப்படும் சிறப்பு ரயிலின் சேவையை நீட்டித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

பயணிகளின் கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் வகையில் இயக்கப்பட்ட எர்ணாகுளம் ரயில்நிலையம் - ஐதராபாத் வரையில் இயக்கப்படும் சிறப்பு ரயிலின் சேவையை நீட்டித்து உத்தரவிடப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக தெற்கு ரயில்வே விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- எர்ணாகுளம் ரயில்நிலையம் - ஐதராபாத் இடையே இயக்கப்படும் (ரயில் எண். 07118) ரயிலின் சேவை அடுத்த மாதம் 26-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. எர்ணாகுளத்தில் வியாழக்கிழமைகளில் இரவு 09.45 மணிக்குப் புறப்படும் இந்த ரயில், மறுநாள் இரவு 10.55 மணியளவில் ஐதராபாத் சென்றடைகிறது. 

ஐதராபாத் - எர்ணாகுளம் ரயில்நிலையம் இடையே இயக்கப்படும் (ரயில் எண். 07117) ரயிலின் சேவை அடுத்த மாதம் 25-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஐதராபாத்தில் புதன்கிழமைகளில் நண்பகல் 12.50 மணிக்குப் புறப்படும் இந்த ரயில், மறுநாள் மாலை 05.30 மணியளவில் எர்ணாகுளம் சென்றடைகிறது. 

இதேபோல, கொச்சிவெலி - ஐதராபாத் சிறப்பு கட்டண ரயிலின் சேவை அடுத்த மாதம் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. திங்கட்கிழமைகளில் கொச்சுவெலியில் இருந்து காலை 07.45 மணிக்குக் கிளம்பும் இந்த ரயில், மறுநாள் மதியம் 02.00 மணியளவில் ஐதராபாத்தை அடைகிறது. 

ஐதராபாத் - கொச்சிவெலி சிறப்பு கட்டண ரயிலின் சேவை அடுத்த மாதம் 28-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. சனிக்கிழமைகளில் ஐதரபாத்தில் இருந்து இரவு 09.00 மணிக்குக் கிளம்பும் இந்த ரயில், திங்கட்கிழமை 03.20 மணியளவில் கொச்சிவெலியை அடைகிறது. 

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...