சூரிய மின்சக்தி உற்பத்தி திட்டங்கள் வரும் 25-ம் தேதி தொடக்கம்

கோவை: ஸ்மார்ட்சிட்டி திட்டம் தொடங்கப்பட்டு மூன்று ஆண்டுகள் நிறைவு பெறுவதையடுத்து, உக்கடம் மற்றும் கவுண்டம்பாளையம் பகுதியில் சூரிய மின்சக்தி உற்பத்தி திட்டங்கள் வரும் ஜூன் 25-ல் தொடங்கப்படுகிறது.

கோவை: ஸ்மார்ட்சிட்டி திட்டம் தொடங்கப்பட்டு மூன்று ஆண்டுகள் நிறைவு பெறுவதையடுத்து, உக்கடம் மற்றும் கவுண்டம்பாளையம் பகுதியில் சூரிய மின்சக்தி உற்பத்தி திட்டங்கள் வரும் ஜூன் 25-ல் தொடங்கப்படுகிறது.

மத்திய, மாநில அரசுகள் மற்றும் மாநகராட்சியின் பங்களிப்போடு செயல்படுத்தப்பட்டு வரும், 'ஸ்மார்ட் சிட்டி' திட்டம் தொடங்கப்பட்டு 3 ஆண்டுகள் நிறைவடைகிறது. இதனையொட்டி, வரும் 25-ம் தேதியன்று டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் விழா நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. அந்த விழாவில், பிரதமர் முன்னிலையில் காணொளி காட்சி மூலம், கோவை மாநகராட்சி சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகளை தொடக்கி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.



இந்நிலையில், ஸ்மார்ட்சிட்டி திட்டம் மூன்றாம் ஆண்டு விழாவில், உக்கடம் மற்றும் கவுண்டம்பாளையம் பகுதியில் கட்டப்பட்டு வரும் சூரிய மின் சக்தி நிலையங்களை தொடங்கி வைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதனையடுத்து, சூரியமின் சக்தி நிலையங்களிலும் கட்டுமானப் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.

இதுகுறித்து ஸ்மார்ட்சிட்டி அதிகாரிகள் கூறியதாவது, "ஜூன் 25-ம் தேதியன்று பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் ஸ்மார்ட் சிட்டி 3-ம் ஆண்டு நிறைவு விழா நடைபெறவிருக்கிறது. இதில், உக்கடம் கழிவுநீர் பண்ணை அருகேயும், கவுண்டம்பாளையம் குப்பைக் கிடங்கு வளாகத்திலும், ரூ.11.55 கோடி செலவில் கட்டப்பட்டு வரும் இரண்டு சூரிய மின்சக்தி நிலையங்களைத் தொடங்கி வைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது," என்றார்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...