கல்லார் அரசு பழப்பண்ணையில் அரிய வகை துரியன் பழங்களின் சீசன் தொடக்கம்

மேட்டுப்பாளையம்: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் கல்லார் அரசு பழப்பண்ணையில் அரிய வகை துரியன் பழங்களின் சீசன் தொடங்கிய நிலையில், பொதுமக்கள் முன்பதிவு செய்து இந்தப் பழங்களை வாங்கிச் செல்கின்றனர்.

மேட்டுப்பாளையம்: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் கல்லார் அரசு பழப்பண்ணையில் அரிய வகை துரியன் பழங்களின் சீசன் தொடங்கிய நிலையில், பொதுமக்கள் முன்பதிவு செய்து இந்தப் பழங்களை வாங்கிச் செல்கின்றனர்.

மலேசியாவைத் தாயகமாக கொண்ட துரியன் பழங்கள் நம் நாட்டில் மிகக் குறைந்த மலைசார்ந்த பகுதிகளிலேயே விளைகிறது. தமிழகத்தைப் பொறுத்தவரை கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள கல்லார் மற்றும் பர்லியார் பகுதிகளில் இவ்வகை துரியன் பழ மரங்கள் நூற்றுக்கும் மேற்பட்டவை உள்ளன.



நீலகிரி மலையடிவாரத்தில் அமைந்துள்ள கல்லார் அரசு தோட்டக்கலை பழப்பண்ணை பகுதியில் ஆண்டு முழுவதும் சீரான சீதோஷின நிலை நீடிப்பதால், இங்கு துரியன் பழ மரங்கள் செழித்து வளர்கின்றன. துரியன் பழங்களின் சீசன் ஜூன் மாதம் முதல் செப்டெம்பர் மாதம் வரையாகும். ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் இப்பண்ணையில் விதைக்கப்பட்ட இம்மரங்கள் ஒவ்வொன்றும் தற்போது சுமார் 200 அடிக்கும் மேல் மிக உயரமாக வளர்ந்துள்ளது.

தற்போது சீசன் துவங்கியுள்ளதால் இந்த மரங்களில் நூற்றுக்கணக்கான துரியன் பழங்கள் காய்த்துள்ளன. முட்கள் நிறைந்த உயரமான இம்மரங்களில் ஏறி பழங்களை பறிப்பது அவ்வளவு சுலபமல்ல. எனவே, இதில் உள்ள பழங்கள் பழுத்துத் தானாக விழும் வரை காத்திருந்து, துரியன் பழங்களை சேகரிக்கின்றனர். சிறிய வகை பலாப்பழங்களை போல் முட்களோடு காட்சியளிக்கும் இப்பழங்களை உடைத்தால், உள்ளே நான்கு சுளைகள் கொண்ட பழங்கள் காணப்படும்.

திருமணமாகி பல ஆண்டுகள் ஆகியும் குழந்தை பாக்கியம் கிட்டாத தம்பதிகள், இவற்றை உண்டால் குழந்தைப்பேறு கிட்டும் என பரவலாக நம்பப்படுகிறது. இந்த ஆண்டில் சில மாதங்களில், அதிலும் குறைந்த எண்ணிக்கையில் மட்டுமே கிடைக்கும் இப்பழங்களுக்கு கடும் கிராக்கி நிலவுகிறது. பலரும் இங்குள்ள அரசு பழப்பண்ணைகளில் ஏற்கனவே முன்பதிவு செய்து, தற்போது இப்பழங்களை வாங்கிச் செல்கின்றனர். கல்லார் பகுதியில் உள்ள தனியார் தோட்டங்களில் விளையும் துரியன் பழங்கள் மேட்டுப்பாளையத்தில் உள்ள பழக்கடைகளிலும் விற்கப்பட்டு வருகின்றன.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...