இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில் கணவன், மனைவி உயிரிழப்பு

திருப்பூர்: திருப்பூர் அருகே இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில் கணவன் மனைவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

திருப்பூர்: திருப்பூர் அருகே இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில் கணவன் மனைவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.



அவினாசிலிங்கம்பாளையம் பகுதியில் கோவை - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் அவிநாசி மோட்டார் வாகன ஆய்வாளர் செந்தில்ராம் வாகனங்களை நிறுத்தி ஆய்வு மேற்கொண்டிருந்தார். அப்போது, கோவை நோக்கி வேகமாக கார் ஒன்று வந்து கொண்டிருந்தது. அதன் ஓட்டுநர், வாகன ஆய்வில் ஈடுபட்டிருந்த அதிகாரி செந்தில்ராமை கவனிக்கவில்லை. கார் ஆய்வாளர் அருகே கார் சென்ற போது, திடீரென சுதாரித்துக் கொண்ட ஓட்டுநர் பதற்றத்தில், காரை வேகமாக திருப்பினார். அப்போது, முன்னால் சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனத்தில் மோதியது.



இந்த விபத்தில், இருசக்கர வாகனத்தில் பயணம் செய்து கொண்டிருந்த தெக்கலூரைச் சேர்ந்த பழனிசாமி மற்றும் அவரது மனைவி மல்லிகா இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதனையடுத்து, அங்கு திரண்ட பொதுமக்கள் விபத்திற்குக் காரணமான மோட்டார் வாகன ஆய்வாளர் செந்தில்ராம் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த அனுப்பர்பாளையம் போலீசார், பொதுமக்களை சமாதானப்படுத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். அதன்பேரில், பொதுமக்கள் கலைந்து சென்றனர். மறியல் காரணமாக அரைமணி நேரத்திற்கும் மேலாகப் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.



Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...