கோவை, திருப்பூர், நீலகிரியில் ரம்ஜான் பண்டிகை உற்சாகக் கொண்டாட்டம்

கோவை: கோவை, திருப்பூர் மற்றும் நீலகிரி உள்பட தமிழகம் முழுவதும் ரம்ஜான் பண்டிகை முன்னிட்டு இஸ்லாமிய மக்கள் சிறப்புக் கூட்டுப் பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.


கோவை: கோவை, திருப்பூர் மற்றும் நீலகிரி உள்பட தமிழகம் முழுவதும் ரம்ஜான் பண்டிகை முன்னிட்டு இஸ்லாமிய மக்கள் சிறப்புக் கூட்டுப் பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.



உலகம் முழுவதும் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டது. தமிழகத்தில் வானில் பிறை தெரியாததையடுத்து இன்று ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இன்று தான் ராம்ஜான் கொண்டாடப்பட்டது. கோவையில் கரும்புக்கடை, பூமார்க்ட், புதிய பேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ரம்ஜான் சிறப்பு தொழுகை இன்று நடைபெற்றது. இதில், ஆயிரக்கணக்கான இஸ்லாமிய மக்கள் கலந்துகொண்டு தங்கள் வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர்.



இதேபோல, ரம்ஜான் பண்டிகையையொட்டி திருப்பூரின் மங்களம், பல்லடம், பெரியதோட்டம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இஸ்லாமிய மக்கள் சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டனர். மேலும், திருப்பூர் நொய்யல் வீதியில் உள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளி மைதானத்தில் தமிழ்நாடு தவ்ஹித் ஜமா அத் சார்பில் சிறப்பு கூட்டுத்தொழுகை நடைபெற்றது. ஜெய்வாபாய் பள்ளி அருகிலும் கூட்டுத்தொழுகை நடந்தது. இதில், ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு ரம்ஜான் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.



நீலகிரி மாவட்டம் உதகை, குன்னூர், கோத்தகிரி மற்றும் குந்தா பகுதிகளில், ஈகை திருநாளை இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையுடன் கொண்டாடி வருகின்றனர். கூடலூர் மற்றும் பந்தலூர் பகுதிகள் கேரளா மாநில எல்லையை ஒட்டியுள்ளதால் நேற்றே ஈகை திருநாளை கொண்டாடி மகிழ்ந்தனர்.



Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...