"நவம்பர் மாதத்திற்குள் அனைத்து பரிவர்த்தனைகளும் கணினி மயமாக்கப்படும்"

கோவை : வரும் நவம்பர் மாதத்திற்குள் அனைத்துப் பரிவர்த்தனைகளும் கணினி மயமாக்கப்படும் என கருவூலம் மற்றும் கணக்குத்துறை ஆணையர் ஜவகர் தெரிவித்துள்ளார்.

கோவை : வரும் நவம்பர் மாதத்திற்குள் அனைத்துப் பரிவர்த்தனைகளும் கணினி மயமாக்கப்படும் என கருவூலம் மற்றும் கணக்குத்துறை ஆணையர் ஜவகர் தெரிவித்துள்ளார். 



ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மை திட்டம் மூலம் முழு கணினி மயமாக்குதல் குறித்த பயிற்சி அரசு அலுவலர்களுக்கு கடந்த 11-ம் தேதி முதல் 16 வரை நிர்மலா கல்லூரியில் நடக்கிறது. இதில், கோவை மாவட்ட கருவூலம் மற்றும் சார்நிலை கருவூலத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டது. இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் அரசு முதன்மை செயலரும் கருவூலம் மற்றும் கணக்குதுறை ஆணையர் ஜவகர், மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் உள்ளிட்ட ஏராளமானோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் வன அலுவலர் வெங்கடேஷ் பேசும்போது :- பதிவேடுகள் கணினி மயமாக்கப்பட்டு வருவதன் மூலம் வரும் காலங்களில் பணி மாறுதல் மற்றும் ஓய்வூதியம் ஆகியன எளிதாகிவிடும். இது வரவேற்கத்தக்க ஒன்றாகும். இதனை அரசு ஊழியர்கள் முழுமையாக தெரிந்து கொண்டு பயனடைய வேண்டும், என்றார்.

மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் பேசுகையில், "கோவை மாவட்டத்தில் 32,847 பேர் பணியாற்றி வருகின்றனர். இதில், 32,000 கணினி மயமாக்கப்பட்டுள்ளது. மீதம் உள்ளவர்களும் விரைவில் இதில் இணைக்கப்படுவார்கள். காகிதமற்ற பணிகள் நடைமுறைப்படுத்தப்படும் போது வேலை எளிதாகிவிடும்," எனக் கூறினார்.



பின்னர், அரசு முதன்மை செயலரும், கருவூலம் மற்றும் கணக்குதுறை ஆணையருமான ஜவகர் கூறியதாவது :- தமிழகத்தில் கருவூலங்கள் 1964-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. வரவு, செலவு கணக்குகள் அனைத்தும் கருவூலங்கள் மூலம் நடைபெற்று வருகின்றன. இதுவரை கருவூல கணக்குகள் காகித கட்டுகளாக அனுப்பி வைக்கப்பட்டு வந்ததால், காலம் மற்றும் நேரம் விரயம் ஏற்பட்டது. கணினி மயமாக்கப்படும் போது அரசு ஊழியர்களின் வரவு, செலவு கணக்குகள் அனைத்தும் இருக்கும் இடத்தில் இருந்தே அறிந்து கொள்ள முடியும்.



இதற்கு முன்பு அரசு ஊழியர்களின் தகவல்கள் சர்வீஸ் ரெஜிஸ்டர் மூலம் அறியப்பட்டு வந்தது. கணினிமயமாக்கப்படும் போது, ஒருவருடைய அனைத்து தகவல்களும் எளிதாகிவிடும் என்பதால், இந்த முயற்சிக்கு முழுமுயற்சி எடுத்து அனைவரும் ஒத்துழைப்பு நல்க வேண்டும். ஒவ்வொருவருக்கும் பயனீட்டாளர் பெயர், கடவுச் சொற்கள் வழங்கப்படும். தற்போது, 150 பேருக்குப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், 3,000 பேருக்கு வரும் நவம்பர் 1-ம் தேதிக்குள் பயிற்சி அளிக்கப்பட்டு, காகிதமற்ற பரிவர்த்தனையாக மாற்றப்படும், என்றார்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...