வாய்க்கால், ஆறுகளை தூர்வாரும் பணிகளை பார்வையிட்ட அமைச்சர் எஸ்.பி. வேலுமணி

கோவை : கோவை மாநகராட்சியின் சார்பில் மேற்கொள்ளப்படும் ஆறுகள், வாய்க்கால்கள், குளங்களை தூர்வாருதல் போன்ற பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி நேரில் பார்வையிட்டார்.

கோவை : கோவை மாநகராட்சியின் சார்பில் மேற்கொள்ளப்படும் ஆறுகள், வாய்க்கால்கள், குளங்களை தூர்வாருதல் போன்ற பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி நேரில் பார்வையிட்டார். 



கோவை மாநகராட்சியில் 85வது வார்டு எம்.ஜி.ஆர் நகர் சேத்துமாவாய்க்காலில் மழைநீர் தங்குதடையின்றி செல்வதற்காக தூர்வாரப்பட்டுள்ளதையும், பொக்ளின் எந்திரம் மூலமாக மேலும் பணிகள் மேற்கொள்வதையும் அமைச்சர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர், கிரீன் பார்க் பகுதியில் உள்ள வாய்க்காலில் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதையும், 76-வது வார்டு, எல்.ஐ.சி காலனியில் உள்ள சேத்துமாவாய்க்கால் பகுதியினை பார்வையிட்டார்.



பின்னர், வாய்க்காலில் மழைநீர் செல்வதற்காகவும் அதிக மழையின்போது குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் வழிந்தோடாமல் தடுக்க முன்னெச்சரிக்கையாக தேவையான பணிகளை மேற்கொள்ளவும், கழிவு நீர் செல்ல வாய்க்கால் மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ளவும் சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அவர் உத்தரவிட்டார். குறிச்சி என்.பி.இட்டேரி மற்றும் போத்தனூரில் 95-வது வார்டு பேச்சியம்மன் கோயில் தெருவில் உள்ள வாய்க்கால்களில் தண்ணீர் தடையின்றி செல்வதையும் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பார்வையிட்டார். 

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...