கோவை: பருவமழை தொடங்கியதையடுத்து, பல்வேறு பகுதிகளில் உள்ள நீர் நிலைகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக அணைகள் நிரம்பு வருகிறது.
கோவை: பருவமழை தொடங்கியதையடுத்து, பல்வேறு பகுதிகளில் உள்ள நீர் நிலைகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக அணைகள் நிரம்பு வருகிறது.
அவ்வாறு கோவை, திருப்பூர் மாவட்டங்களில் உள்ள அணைகளில் உள்ள நீர் இருப்பு விவரம் பின்வருமாறு.
அணைகள் (கோவை மாவட்டம்)
சோலையார் அணை-யின் மொத்த கொள்ளளவு 160 அடி. இந்த அணையில் தற்போது 130.51 அடியாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. அணைக்கு நீர்வரத்து 3957.29 கன அடியாக உள்ளது.
பரம்பிக்குளம் அணை-யின் மொத்த கொள்ளளவு 72 அடி. இந்த அணையில் தற்போது 15.78 அடியாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது.
அணைக்கு நீர்வரத்து 1988 கன அடியாக உள்ள நிலையில், வினாடிக்கு 7 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
ஆழியார் அணை-யின் மொத்த கொள்ளளவு 120 அடி. இந்த அணையில் தற்போது 69 அடியாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது.
அணைக்கு நீர்வரத்து 3101 கன அடியாக உள்ள நிலையில், வினாடிக்கு 67 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
திருப்பூர் மாவட்டம்
திருமூர்த்தி அணை-யின் மொத்த கொள்ளளவு 60 அடி. இந்த அணையில் தற்போது 12.68 அடியாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

அணைக்கு நீர்வரத்து 40 கன அடியாக உள்ள நிலையில், வினாடிக்கு 26 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
அமராவதி அணை-யின் மொத்த கொள்ளளவு 90 அடி. இந்த அணையில் தற்போது 64.08 அடியாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது.
அணைக்கு நீர்வரத்து 1136 கன அடியாக உள்ள நிலையில், வினாடிக்கு 2404 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
மழை அளவு (நீலகிரி)

குன்னூர் 8.20 மி.மீ, கூடலூர் 28 மி.மீ, குந்தா 20 மி.மீ, கேத்தி 11 மி.மீ, கோத்தகிரி 7.50 மி.மீ, நடுவட்டம் 22 மி.மீ, ஊட்டி 26 மி.மீ, கல்லட்டி 14 மி.மீ, கிளன்மார்கன் 20 மி.மீ, அப்பர் பவானி 24 மி.மீ, எமரால்டு 23 மி.மீ, அவலாஞ்சி 41 மி.மீ, கெத்தை 16 மி.மீ, கின்னக்கொரை 5 மி.மீ, கொடனாடு 16 மி.மீ, தேவாலா 66 மி.மீ மழை பதிவாகியுள்ளது.