சிறுத்தை தாக்கி பெண் தொழிலாளி படுகாயம்: வால்பாறையில் தொடரும் அச்சுறுத்தல்

கோவை: வால்பாறையில் சிறுத்தைப் புலி தாக்கியதில் பெண் தொழிலாளி ஒருவர் படுகாயமடைந்தார்.

கோவை: வால்பாறையில் சிறுத்தைப் புலி தாக்கியதில் பெண் தொழிலாளி ஒருவர் படுகாயமடைந்தார்.

கோவை மாவட்ட ஆனைமலை புலிகள் காப்பகத்தில் ஏராளமான சிறுத்தைகள் புலிகள் யானைகள் உள்ளன. இந்நிலையில், சிறுத்தைப்புலிகள் தொழிலாளர்களின் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து அவர்கள் வளர்க்கும் கால்நடைகள் மற்றும் நாய்களை கொன்று தின்று வருகின்றன.

மேலும், எதிரில் தென்படும் மனிதர்கள், குழந்தைகளையும் தாக்கி வருகின்றன. இந்நிலையில், இன்று மாலை வால்பாறையை அடுத்த சின்கோனா தேயிலை தோட்டத்தில் மாதவி (36) என்ற பெண் தொழிலாளி தனது வீட்டு வாசப்படியில் அமர்ந்திருந்தார்.

அப்போது தேயிலை செடிகள் மத்தியில் பதுங்கி இருந்த சிறுத்தைப்புலி ஒன்று திடீரென அவரைத் தாக்கி தூக்கி கொண்டு ஓடியது. இதனால் அதிர்ச்சியடைந்த அவரது கணவர் பாலகிருஷ்ணன் கூச்சலிட்டபடி சிறுத்தையை விரட்டி தாக்கியுள்ளார்.

தொடர்ந்து, அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஓடி வரவே சிறுத்தை மாதவியை காட்டில் போட்டு விட்டு தப்பி ஓடியது.

மாதவியை மீட்ட அவர்கள் வால்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். முதலுதவி சிகிச்சைக்குப் பின் அவர் கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

இந்த சம்பவம் தொடர்பாக வால்பாறை காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

சிறுத்தைப் புலியின் நடமாட்டம் அப்பகுதியில் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...