சம்பந்திகளுக்கும், பினாமிகளுக்கும் அரசு டெண்டர்கள் வழங்கியது குறித்து முதலமைச்சர் மீது தி.மு.க., புகார்

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் சம்பந்திகளுக்கும், பினாமிகளுக்கும் அரசு டெண்டர்கள் ஒதுக்கியது தொடர்பாக தி.மு.க., சார்பில் விஜிலென்ஸ் கமிஷனருக்கு புகார் அளிக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் செயல் தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் சம்பந்திகளுக்கும், பினாமிகளுக்கும் அரசு டெண்டர்கள் ஒதுக்கியது தொடர்பாக தி.மு.க., சார்பில் விஜிலென்ஸ் கமிஷனருக்கு புகார் அளிக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் செயல் தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார். 

இது தொடர்பாக டுவிட்டரில் அவர் விடுத்துள்ள பதிவில் கூறியிருப்பதாவது :- தமிழகத்தின் கஜானா பொதுமக்களுக்கு செயல்படுகிறதோ இல்லையோ, அ.தி.மு.க., அரசின் ஊழலுக்குப் பயன்படுத்தப்பட்டு பகல் கொள்ளை அநியாயமாக அரங்கேறி வருகிறது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்களின் இமாலய டெண்டர் ஊழல்கள் குறித்து உரிய நடவடிக்கை எடுக்காவிடில், தி.மு.க., நீதிமன்றத்தை நாட தயங்காது.

நெடுஞ்சாலை துறையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தன் அதிகாரத்தைப் பயன்படுத்தி சம்பந்திகளுக்கும், பினாமிகளுக்கும் மோசடி செய்து ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் டெண்டர்களை வழங்கியது குறித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி விஜிலென்ஸ் கமிஷனருக்கு தி.மு.க., சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது, இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். 

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...