பழுதடைந்த சாலையை சீரமைக்கக் கோரி சாலையில் போட்டோவுக்கு மாலை அணிவித்து போராட்டம்

திருப்பூர் : திருப்பூரில் பழுதடைந்த சாலையை சீரமைக்கக் கோரி சாலையில் போட்டோவுக்கு மாலை அணிவித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.

திருப்பூர் : திருப்பூரில் பழுதடைந்த சாலையை சீரமைக்கக் கோரி சாலையில் போட்டோவுக்கு மாலை அணிவித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். 

பி.என்.ரோடு பிச்சம்பாளையம்புதூர் நான்கு சாலை சந்திப்பில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சாலையின் மையப்பகுதியில் பள்ளம் ஏற்பட்டது. தற்போது, சில நாட்களாக மழை பெய்து வருவதால் அந்தப் பள்ளம் பெரிதாகி விட்டது. இதனால், அடிக்கடி அந்தப் பகுதியில் விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் இரவு பி.என்.ரோட்டில் மோட்டார் சைக்கிளில் குடும்பத்துடன் வந்தவர், அந்தப் பள்ளத்தில் ஏறி இறங்கியபோது நிலைதடுமாறி கீழே விழுந்தனர். இதனால், அவர்களுக்குக் காயம் ஏற்பட்டது. 

இந்த நிலையில், நடுரோட்டில் ஏற்பட்டுள்ள பள்ளத்தை சீரமைக்கக் கோரி அப்பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட இடத்தில் திரண்டனர். பின்னர், அவர்கள் அந்தப் பள்ளத்தில் கேள்விக்குறி அடையாளத்துடன் கூடிய போட்டோவுக்கு மாலை அணிவித்து போராட்டம் நடத்தினர். இதனால், அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதுடன், பெரும்பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து தகவலறிந்த அனுப்பர்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். உடனடியாக சரி செய்யப்படுவதாகக் கூறியதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...