கர்நாடகாவின் கபினி அணையில் இருந்து 15,000 கனஅடி நீர் திறப்பு

கர்நாடகாவில் பெய்து வரும் கனமழையினால், கபினி அணையில் இருந்து தமிழகத்திற்கு 15,000 கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது.

கர்நாடகாவில் பெய்து வரும் கனமழையினால், கபினி அணையில் இருந்து தமிழகத்திற்கு 15,000 கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. 

தென் மாவட்ட பாசன வசதிக்க கர்நாடகா அணையில் இருந்து நீர் திறந்து விடுமாறு தமிழக அரசு சார்பில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வந்தது. ஆனால், மாநிலத்தில் குடிநீர் தேவைக்கான நீரே இல்லை, எனவே நீர் திறந்துவிட முடியாது என கர்நாடகாவின் அப்போதைய முதலமைச்சர் சித்தராமையா திட்டவட்டமாகத் தெரிவித்தார். இதனிடையே, தமிழக அரசின் சார்பில் தொடரப்பட்ட வழக்கில், காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால், அதிருப்தியடைந்த கர்நாடக அரசு, உச்சநீதிமன்றம் அமைத்த ஆணையத்தின் தங்களது தரப்பு உறுப்பினர்களின் பெயர்களை பரிந்துரைக்க தயக்கம் காட்டி வருகிறது. 

இதனிடையே, பாசனத்திற்கு தேவையான நீர் திறக்கப்படாததால், தமிழக விவசாயிகள் ஏமாற்றமடைந்துள்ளனர். இந்த நிலையில், தமிழகம், கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. தமிழகத்தில் பெய்த மழையினால், நீர்நிலைகள் நிரம்பி வழிகின்றன. தண்ணீரை தேக்கி வைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அணைகளில் நிரம்பி வழியும் தண்ணீர் வீணாகக் கடலில் கலக்கிறது. இதேபோல, கர்நாடகாவிலும் மழை வெளுத்து வாங்குகிறது. 

இந்த நிலையில், கர்நாடகா நீர்ப் பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால், தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால் கே.ஆர்.எஸ்., கபினி உள்ளிட்ட அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. இந்நிலையில், இன்று கபினி அணையிலிருந்து தமிழகத்திற்கு 1,000 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்ட நிலையில், தற்போது தண்ணீர் திறப்பு 15 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. இந்த தண்ணீர் ஓரிரு நாளில் தமிழக எல்லையை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. கபினி அணைக்கு நீர் வரத்து அதிகமாக இருப்பதால், தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில் பாசனத்திற்கு தண்ணீர் தேவைப்பட்ட போது தண்ணீரை திறந்துவிடாத கர்நாடகா, அணைகள் நிரம்புவதால், அதனைத் தேக்கி வைக்க முடியாத சூழலில் தண்ணீரை திறந்துவிட்டுள்ளது. அணைகள் நிரம்பி தானாக ஓடும் நீரை, தமிழகத்திற்கு திறந்துவிட்டதாகக் கணக்கு காட்டும் கர்நாடக அரசின் நடவடிக்கை விசமத்தனம் வாய்ந்ததாக உள்ளது. 

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...