உலக இரத்த கொடையாளர் தினம் : கோவையில் மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி

கோவை: உலக இரத்த கொடையாளர் தினத்தை முன்னிட்டு கோவையில் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியில் 500-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

கோவை: உலக இரத்த கொடையாளர் தினத்தை முன்னிட்டு கோவையில் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியில் 500-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.



உலகம் முழுவதும் இன்று இரத்த கொடையாளர் தினம் கடைபிடிக்கப்படுகிறது, இதனை முன்னிட்டு, பல்வேறு இடங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக கோவையில் கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.



தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம் மற்றும் அரசு ரத்த வங்கிகள் இணைந்து நடத்திய இந்த பேரணி இன்று காலை ஒன்பது மணிக்குத் தொடங்கும் என்று மாணவர்களுக்கு தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து, மாணவர்கள் காலை 9 மணிக்கு ஆட்சியர் அலுவலகத்தில் கூடினர். 



மழை காரணமாக சிறிது காலம் தாமதமாக துவங்கும் என ஒருங்கிணைப்பாளர்கள் என கூறியதை தொடர்ந்து காத்திருந்தனர். நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியர் கொடி அசைத்து துவக்கி வைப்பார் என்பதாலும் மழை காரணமாக ஏற்கனவே ஒரு மணி நேரம் தாமதமாகி இருந்த நிலையில், பொறுமையிழந்த அவர்கள் மாவட்ட ஆட்சியர் பதினோரு மணிக்கு வந்து தொடங்கி வைத்ததால், முனுமுனுத்படியே ஊர்வலத்தில் பங்கேற்றனர்.



கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து அரசு மருத்துவமனை வரை நடைபெற்ற பேரணியில் 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். இரத்த தானம் குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தும் நோக்கில் பேரணி நடத்தப்பட்டதாக ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர். மாணவர்கள் பங்கேற்பே கட்டாயப்படுத்துவதாக கூறப்பட்டு வரும் நிலையில் அவர்களை காக்க வைக்கப்பட்டது மாணவர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...