18 எம்.எல்.ஏ.க்களின் தகுதி நீக்க வழக்கில் நீதிபதிகள் மாறுபட்டக் கருத்து: 3-வது நீதிபதிக்கு வழக்கு மாற்றம்

டி.டி.வி., தினகரனின் ஆதரவு அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில் இருநீதிபதிகள் மாறுபட்ட கருத்துக்களை தெரித்துள்ளதால், 3-வது நீதிபதிக்கு வழக்கு மாற்றப்பட்டுள்ளது.

டி.டி.வி., தினகரனின் ஆதரவு அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில் இருநீதிபதிகள் மாறுபட்ட கருத்துக்களை தெரித்துள்ளதால், 3-வது நீதிபதிக்கு வழக்கு மாற்றப்பட்டுள்ளது.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது நம்பிக்கையில்லை எனக் கூறி டி.டி.வி., தினகரனின் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 19 பேர் ஆளுநரிடம் மனு கொடுத்தனர். இதைத் தொடர்ந்து, புகராளித்த 19 எம்.எல்.ஏக்களும் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு பேரவைத் தலைவர் தனபால் நோட்டீஸ் அனுப்பினார். சட்டப்பேரவை உறுப்பினர் ஜக்கையன் நேரில் ஆஜராகி விளக்கமளித்த நிலையில், மற்றவர்கள் ஆஜராகவில்லை. இதையடுத்து, டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேரை தகுதி நீக்கம் செய்து பேரவைத் தலைவர் தனபால் உத்தரவிட்டார்.



இந்தத் தகுதி நீக்க உத்தரவை எதிர்த்து 18 எம்.எல்.ஏ.-க்களும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி எம்.துரைசாமி, உயர் நீதிமன்றம் மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை 18 தொகுதிகள் காலியாக இருப்பதாகவோ, அந்தத் தொகுதிகளுக்கு தேர்தல் அறிவிப்போ வெளியிடக் கூடாது என்று உத்தரவிட்டிருந்தார்.

தொடர்ந்து இந்த வழக்கு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி மற்றும் நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வுக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் பல மூத்த வழக்குரைஞர்கள் ஆஜராகி வாதிட்டனர். அனைத்துத் தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் வழக்கைத் தேதி குறிப்பிடாமல் தீர்ப்புக்காக தலைமை நீதிபதி அடங்கிய அமர்வு கடந்த ஜனவரி 23-ஆம் தேதி ஒத்திவைத்தது.

இந்த நிலையில், இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கியது. டிடிவி தினகரனின் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேரை பதவி நீக்கம் செய்த வழக்கில் இருநீதிபதிகளும் மாறுபட்ட கருத்துக்களை தெரிவித்துள்ளனர். அதாவது, தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி பிறப்பித்த உத்தரவில், '18 எம்.எல்.ஏ.,க்களின் தகுதி நீக்கம் செல்லும். அதன்படி, 18 தொகுதிகள் காலியாக இருப்பதாக அறிவித்து, தேர்தலை நடத்தலாம்," எனக் கூறினார். இதனிடையே, மற்றொரு நீதிபதியான சுந்தர், "18 எம்.எல்.ஏ.க்களின் தகுதி நீக்கம் செய்யப்பட்டது செல்லாது." என அறிவித்துள்ளார். இதனால், கடந்த 20.09.2017 அன்று நீதிபதி துரைசாமியின் இடைக்கால உத்தரவு நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் இருநீதிபதிகளின் கருத்துக்கள் மாறுபட்டிருப்பதால், 3வது நீதிபதியிடம் இந்த வழக்கு கொண்டு செல்லப்படுகிறது. 3-வது நீதிபதியின் முடிவைப் பொறுத்து, பெரும்பான்மை அடிப்படையில் வழக்கின் தீர்ப்பு அமையும். எனவே, 3-வது நீதிபதி விரைவில் நியமிக்கப்பட உள்ளார்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...