கோவை - மஸ்கட் இடையே விமானசேவையை தொடங்குகிறது ஓமன் ஏர்ஸ்?

கோவை : கோவை - மஸ்கட் இடையே விமான சேவையை தொடங்க இருப்பதாக ஓமன் ஏர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.


கோவை : கோவை - மஸ்கட் இடையே விமான சேவையை தொடங்க இருப்பதாக ஓமன் ஏர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. 

மஸ்கட்டில் இருந்து ஆப்ரிக்கா, ஆசியா உள்ளிட்ட கண்டங்களில் விமான சேவைகளை அதிகரிக்க ஓமன் ஏர்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதன் ஒருபகுதியாக, இந்தியாவிற்கு இயக்கப்படும் விமானங்களில் எண்ணிக்கையை அதிகரிக்க அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. அதன்படி, மஸ்கட்டில் இருந்து கோவைக்கு விமானத்தை இயக்க ஓமன் ஏர்ஸ் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

இது தொடர்பாக ஓமன் ஏர்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி அளித்த பேட்டியில், "எங்களது நிறுவனம் இந்தியாவிற்கான சேவையை அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளோம். அதாவது, இந்தியாவிற்கு 27,000 இருக்கைகளாக இருக்கும் தங்களது சேவையை 60,000 இருக்கைகளாக அதிகரிக்க உள்ளோம். அதன்படி, மஸ்கட்டில் இருந்து மங்களூரூ, கோவை மற்றும் அகமதாபாத் போன்ற நகரங்களுக்கு விமானத்தை இயக்க முடிவு செய்துள்ளோம். இந்த சேவையில், ஏ-330எஸ் ரக மற்றும் டிரீம்லைனர்ஸ் போன்ற விமானங்களை இயக்கப்படும்." என்றார். 

கோவைக்கு சர்வதேச விமானங்களை இயக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வந்த நிலையில், கோவை-மஸ்கட் இடையிலான விமான சேவை தொடங்கப்பட இருக்கிறது. இந்தத் திட்டம் நிறைவேற்றப்பட்டால், கோவை, திருப்பூர், ஈரோடு போன்ற கொங்கு மாவட்ட மக்களுக்கு நல்ல பயனுள்ளதாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. 

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...