தேயிலை விவசாயிகளின் கடன்களை மத்திய, மாநில அரசுகள் ரத்து செய்ய வேண்டும்: அய்யாக்கண்ணு வலியுறுத்தல்

நீலகிரி: தேயிலை விவசாயிகள் வாங்கிய கடனை மத்திய, மாநில அரசுகள் ரத்து செய்ய வேண்டும் என குன்னூரில் செய்தியாளர்களைச் சந்தித்த தென்னிந்திய தேசிய நதிகள் இணைப்பு சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு வலியுறுத்தியுள்ளார்.

நீலகிரி: தேயிலை விவசாயிகள் வாங்கிய கடனை மத்திய, மாநில அரசுகள் ரத்து செய்ய வேண்டும் என குன்னூரில் செய்தியாளர்களைச் சந்தித்த தென்னிந்திய தேசிய நதிகள் இணைப்பு சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு வலியுறுத்தியுள்ளார். 



நீலகிரி மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் பசுந்தேயிலைக்கு விலைநிர்ணயம் செய்யக்கோரியும், நிலுவை தொகையை வழங்கக் கோரியும் குன்னுார் தேயிலை வாரியம் அலுவலகம் முன்பு தென்னிந்திய தேசிய நதிகள் இணைப்பு சங்கத்தின் மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் படுக தேச கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். 

பின்னர், அவர்களிடம் தென்னிந்திய தேயிலை வாரிய செயல் இயக்குநர் பால்ராசு பேச்சுவார்த்தை நடத்தினார். சுமார் 2 மணி நேரம் நடைபெற்ற பேச்சுவார்த்தையில், வரும் 15-ம் தேதிக்குள் நிலுவைத் தொகை வழங்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, போராட்டம் கைவிடப்பட்டது. 

இதனிடையே, செய்தியாளர்களிடம் அய்யாக்கண்ணு பேசுகையில், "தேர்தல் வரும் போது விவசாயிகள் நாட்டின் முதுகெலும்பாகவும், தேர்தல் முடிந்துவிட்டால், அவர்கள் இந்த நாட்டின் அடிமைகளாவர். விவசாயிகளுக்கு இலாபகரமான விலை கொடுக்க மறுக்கின்றனர். பசுந்தேயிலைக்கு விலையாக ரூ. 50 கொடுக்கலாம். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இருக்கும்போது கூட்டுறவு சங்கத்தில் லாபம் கிடைத்தது. ஊட்டி தேயிலை என்று விற்பனை செய்தார்கள். நான்கு கிலோவிற்கு ரூ. 120 ஆகிறது. அத்துடன் ரூ. 50-ஐ சேர்த்து ரூ. 200-க்கு விற்பனை செய்யலாம். 

இதனால், பொதுமக்களும், தேயிலை விவசாயிகளும் பயன்பெறலாம். மேலும், தேயிலை விவசாயிகள் வாங்கிய கடனை ரத்து செய்ய வேண்டும். படுக இன மக்கள் செய்யும் தேயிலை தொழில் அழிவின் விளிம்பில் உள்ளது. படுக மக்களை எஸ்.டி., பிரிவில் சேர்க்க வேண்டும்," என்றார். 

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...