கோவை அருகே மான் இறைச்சி வைத்திருந்த 4 பேருக்கு அபராதம்

கோவை: மேட்டுப்பாளையம் அருகே மான் இறைச்சியை விற்பனை செய்து வந்த 4 பேருக்கு வனத்துறையினர் அபராதம் விதித்துள்ளனர்.

கோவை: மேட்டுப்பாளையம் அருகே மான் இறைச்சியை விற்பனை செய்து வந்த 4 பேருக்கு வனத்துறையினர் அபராதம் விதித்துள்ளனர்.

மேட்டுப்பாளையத்தை யடுத்த வெள்ளியம்பாளையம் சாலை அருகே அபிலா எனும் பி. பிரேமா (27) என்பவர் வீட்டில் மான் இறைச்சி வைத்து விற்பனை செய்வதாக நேற்று தகவல் கிடைத்துள்ளது. இது தொடர்பாக சோதனை நடத்திய வனத்துறையினர் பிரேமாவைக் கைது செய்தனர். மேலும், அவரிடம் நடத்திய விசாரணையில், அதே பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார் (23) என்பவரிடம் மான் இறைச்சியைப் பெற்று, அதனை விற்று பணத்தை பங்குப் போட்டுக் கொள்வது தெரியவந்தது.

இதையடுத்து, தலைமறைவாக இருந்து வந்த ராஜ்குமாரை வனத்துறையினர் இன்று அதிகாலை கைது செய்தனர். அப்போது, ஆற்றங்கரையோரம் சுற்றித் திரியும் மான்களை நாய்களைக் கொண்டு வேட்டையாடி இறைச்சியை எடுத்து வந்து விற்பனை செய்வதை ஒப்புக்கொண்டார். மேலும், மான் இறைச்சியை விற்பனை செய்ததாக ஜி. பிரேமா (28), கே. நஞ்சம்மாள் (74) ஆகியோரும் பிடிபட்டனர்.



அவர்களில்,வீட்டில் மான் இறைச்சி வைத்திருந்த குற்றத்திற்காக அபிலா மற்றும் ராஜ்குமாருக்கு தலா ரூ. 20,000-மும், பிரேமா மற்றும் நஞ்சம்மாளுக்கு ரூ. 5,000-மும் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், அவர்களிடம் இருந்து 4 கிலோ மான் இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டது.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...