கோவையில் பண மோசடியில் ஈடுபட்டவருக்கு 3 ஆண்டுகள் சிறை

கோவை : பேப்பர் கப் தயாரிக்கும் இயந்திரம் தருவதாகக் கூறி மோசடி செய்தவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், பாதிக்கப்பட்டவருக்கு உரிய இழப்பீட்டையும் வழங்கக் கோவை நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

கோவை : பேப்பர் கப் தயாரிக்கும் இயந்திரம் தருவதாகக் கூறி மோசடி செய்தவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், பாதிக்கப்பட்டவருக்கு உரிய இழப்பீட்டையும் வழங்கக் கோவை நீதிமன்றம் தீர்ப்பளித்தது. 

நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த நாகராஜன் என்பவர் பேப்பர் கப் தயாரிக்கும் தொழிலை செய்ய முடிவு செய்தார். இதற்காக, கோவை பாப்பநாயகன்பாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் ஏ.ஜி.எஸ்., டிரேடர்ஸ் என்ற பேப்பர் கப் தயாரிக்கும் இயந்திரம் விற்பனை செய்யும் நிறுவனத்தின் உரிமையாளர் செல்வராஜுவை அணுகியுள்ளார். அவரிடம் இரு இயந்திரம் வாங்க ரூ. 13.65 லட்சம் பணத்தைக் கொடுத்துள்ளார்.

ஆனால், பணம் கொடுத்தும் நீண்ட நாட்களாகியும், இயந்திரம் தராமல் மோசடி செய்ததால் கடந்த 2016-ல் கோவை மாநகர குற்றப்பிரிவு போலீசாரிடம் நாகராஜன் புகார் அளித்தார். இதைத் தொடர்ந்து, இந்த வழக்கு கோவை 3-வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில், இயந்திரத்தை அளிக்காமல் மோசடியில் ஈடுபட்ட செல்வராஜுக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், பாதிக்கப்பட்டவருக்கு ரூ. 12.4 லட்சம் தொகையுடன் 9% வட்டியுடன் இழப்பீடு வழங்க நீதிபதி வேலுச்சாமி உத்தரவிட்டுள்ளார். 

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...