சின்னவேடம்பட்டி ஏரி பாதுகாப்பு இயக்கம் சார்பில் நன்றி பாராட்டும் நிகழ்வு

கோவை: தென்மேற்கு பருவமழையின் காரணமாக சின்னவேடம்பட்டி ஏரிக்கு நீர்வரத்து வரத் தொடங்கியதையடுத்து, சின்னவேடம்பட்டி ஏரி பாதுகாப்பு இயக்கம் சார்பில் நன்றி பாராட்டும் நிகழ்வு நேற்று நடைபெற்றது.

கோவை: தென்மேற்கு பருவமழையின் காரணமாக சின்னவேடம்பட்டி ஏரிக்கு நீர்வரத்து வரத் தொடங்கியதையடுத்து, சின்னவேடம்பட்டி ஏரி பாதுகாப்பு இயக்கம் சார்பில் நன்றி பாராட்டும் நிகழ்வு நேற்று நடைபெற்றது.



கோவை அருகே உள்ள சின்னவேடம்பட்டி ஏரியானது பல ஆண்டுகளாக நீர்வரத்து இல்லாமல் இருந்தது. சுமார், 200 ஏக்கர் பரப்பளவில் உள்ள இந்த ஏரியில் தண்ணீர் நிரம்பினால் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் பயன்பெறும். கோவை துடியலூர் அருகே உள்ள தடாகம், மாங்கரை, கணுவாய் பகுதியில் பெய்யும் மழையானது, ராஜவாய்க்கல் வழியாக 9 கி.மீ., தூரம் பயணம் செய்து சின்னவேடம்பட்டி ஏரியை சென்றடைகிறது. அதன் பின், அம்மன் கோவில் வழியாக பயணம் செய்து சுமார் 400 ஏக்கர் பரப்பளவில் உள்ள ஆச்சான் குளம் சென்றடைகிறது.



இந்த சின்னவேடம்பட்டி ஏரிக்கு நீர்வரத்து வரவழைக்க ராஜவாய்க்கலை தூர்வார வேண்டும், ஏரியினையும் சீர்செய்ய வேண்டும் என்பதற்காக கடந்தாண்டு சின்னவேடம்பட்டி ஏரி பாதுகாப்பு இயக்கம் சார்பாக பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அதன் விளைவாக தற்போது பெய்த மழை காரணமாக நீர்வரத்து வரத் தொடங்கியது.



இதனை கவுரவிக்கும் விதமாக, சின்னவேடம்பட்டி ஏரி பாதுகாப்பு இயக்கம் சார்பாக ஏரிக்கு நீர்வரத்து வர உதவிய அனைவருக்கும் நன்றி பாராட்டும் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பல சமூக ஆர்வலர்கள், ஏரி பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...