கோவை: தென்மேற்கு பருவமழையின் காரணமாக சின்னவேடம்பட்டி ஏரிக்கு நீர்வரத்து வரத் தொடங்கியதையடுத்து, சின்னவேடம்பட்டி ஏரி பாதுகாப்பு இயக்கம் சார்பில் நன்றி பாராட்டும் நிகழ்வு நேற்று நடைபெற்றது.
கோவை: தென்மேற்கு பருவமழையின் காரணமாக சின்னவேடம்பட்டி ஏரிக்கு நீர்வரத்து வரத் தொடங்கியதையடுத்து, சின்னவேடம்பட்டி ஏரி பாதுகாப்பு இயக்கம் சார்பில் நன்றி பாராட்டும் நிகழ்வு நேற்று நடைபெற்றது.

கோவை அருகே உள்ள சின்னவேடம்பட்டி ஏரியானது பல ஆண்டுகளாக நீர்வரத்து இல்லாமல் இருந்தது. சுமார், 200 ஏக்கர் பரப்பளவில் உள்ள இந்த ஏரியில் தண்ணீர் நிரம்பினால் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் பயன்பெறும். கோவை துடியலூர் அருகே உள்ள தடாகம், மாங்கரை, கணுவாய் பகுதியில் பெய்யும் மழையானது, ராஜவாய்க்கல் வழியாக 9 கி.மீ., தூரம் பயணம் செய்து சின்னவேடம்பட்டி ஏரியை சென்றடைகிறது. அதன் பின், அம்மன் கோவில் வழியாக பயணம் செய்து சுமார் 400 ஏக்கர் பரப்பளவில் உள்ள ஆச்சான் குளம் சென்றடைகிறது.

இந்த சின்னவேடம்பட்டி ஏரிக்கு நீர்வரத்து வரவழைக்க ராஜவாய்க்கலை தூர்வார வேண்டும், ஏரியினையும் சீர்செய்ய வேண்டும் என்பதற்காக கடந்தாண்டு சின்னவேடம்பட்டி ஏரி பாதுகாப்பு இயக்கம் சார்பாக பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அதன் விளைவாக தற்போது பெய்த மழை காரணமாக நீர்வரத்து வரத் தொடங்கியது.

இதனை கவுரவிக்கும் விதமாக, சின்னவேடம்பட்டி ஏரி பாதுகாப்பு இயக்கம் சார்பாக ஏரிக்கு நீர்வரத்து வர உதவிய அனைவருக்கும் நன்றி பாராட்டும் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பல சமூக ஆர்வலர்கள், ஏரி பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

கோவை அருகே உள்ள சின்னவேடம்பட்டி ஏரியானது பல ஆண்டுகளாக நீர்வரத்து இல்லாமல் இருந்தது. சுமார், 200 ஏக்கர் பரப்பளவில் உள்ள இந்த ஏரியில் தண்ணீர் நிரம்பினால் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் பயன்பெறும். கோவை துடியலூர் அருகே உள்ள தடாகம், மாங்கரை, கணுவாய் பகுதியில் பெய்யும் மழையானது, ராஜவாய்க்கல் வழியாக 9 கி.மீ., தூரம் பயணம் செய்து சின்னவேடம்பட்டி ஏரியை சென்றடைகிறது. அதன் பின், அம்மன் கோவில் வழியாக பயணம் செய்து சுமார் 400 ஏக்கர் பரப்பளவில் உள்ள ஆச்சான் குளம் சென்றடைகிறது.

இந்த சின்னவேடம்பட்டி ஏரிக்கு நீர்வரத்து வரவழைக்க ராஜவாய்க்கலை தூர்வார வேண்டும், ஏரியினையும் சீர்செய்ய வேண்டும் என்பதற்காக கடந்தாண்டு சின்னவேடம்பட்டி ஏரி பாதுகாப்பு இயக்கம் சார்பாக பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அதன் விளைவாக தற்போது பெய்த மழை காரணமாக நீர்வரத்து வரத் தொடங்கியது.

இதனை கவுரவிக்கும் விதமாக, சின்னவேடம்பட்டி ஏரி பாதுகாப்பு இயக்கம் சார்பாக ஏரிக்கு நீர்வரத்து வர உதவிய அனைவருக்கும் நன்றி பாராட்டும் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பல சமூக ஆர்வலர்கள், ஏரி பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.