நாளை வெளியாகிறது பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் மே 21-ல் வழங்க முடிவு

சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாளை பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகிறது.

சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாளை பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகிறது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த மார்ச் மாதம் 1-ம் தேதி பிளஸ் 2 தேர்வு தொடங்கியது. இந்த தேர்வினை 8 லட்சத்து 66,934 மாணவர்கள் எழுதினர். ஏப்ரல் 6-ம் தேதி தேர்வுகள் நிறைவடைந்தன. இதைத் தொடர்ந்து, விடைத் தாள்கள் திருத்தும் பணிகள் முடிவடைந்தன. இந்நிலையில் நாளை தேர்வு முடிவுகள் வெளியிடப்பட உள்ளது.

அரசு தேர்வுத் துறை இயக்குநர் அலுவலகம் அமைந்துள்ள சென்னை டி.பி.ஐ., வளாகத்தில் நாளை காலை 9.30 மணிக்கு தேர்வு முடிவுகளை அரசு தேர்வுகள் இயக்குநர் வசுந்தரா தேவி வெளியிடுகிறார். தேர்வு முடிவு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டதும் தேர்வுத் துறையின் இணையதளங்களான www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in ஆகியவற்றில் மாணவர்கள் தங்களது பதிவு எண், பிறந்த தேதியைக் குறிப்பிட்டு, தேர்வு முடிவுகளை மதிப்பெண்களுடன் அறிந்து கொள்ளலாம்.

அதோடு, தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வரும் 21-ம் தேதி வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...

ஆழியாறு அணை நீர்மட்டம் 65.4 அடியாக உயர்வு

ஆனைமலை ஆழியாறு அணையின் நீர்மட்டம் மே 26 நிலவரப்படி 65.4 அடியாக உள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக வினாட...

காலவரையற்ற வேலை நிறுத்தம்: திருப்பூர் மாவட்டத்தில் 197 டாஸ்மாக் கடைகள் மூடல்

திருப்பூரில் காலி மது பாட்டில்கள் மீட்பு பணிக்கு தனி ஊழியர் நியமனம் கோரி டாஸ்மாக் பணியாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்....