திருப்பூர் : மக்கள் விரோத திட்டங்களை செயல்படுத்தக் கூடாது என்று வலியுறுத்தி திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட ஊர்வலமாக வந்த தமிழர் மறுமலர்ச்சி கழகத்தினரை போலீசார் கைது செய்தனர்.
திருப்பூர் : மக்கள் விரோத திட்டங்களை செயல்படுத்தக் கூடாது என்று வலியுறுத்தி திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட ஊர்வலமாக வந்த தமிழர் மறுமலர்ச்சி கழகத்தினரை போலீசார் கைது செய்தனர்.

தமிழக மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் மீத்தேன், ஹைட்ரோ கார்பன் மற்றும் நியூட்ரினோ உள்ளிட்ட மக்கள் விரோத திட்டங்களை தமிழகத்தில் செயல்படுத்த விரும்பும் மத்திய அரசின் முயற்சியை கைவிட வேண்டும் என்று வலியுறுத்தியும், நீட் தேர்விற்கு தமிழக மாணவர்களுக்கு நிரந்தரவிலக்கு அளிக்க வேண்டும், காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்திட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு அளிக்க வந்த தமிழர் மறுமலர்ச்சி கழகத்தினரை போலீசார் முன்னதாகவே கைது செய்தனர்.
இதனால் திருப்பூர் பல்லடம் சாலையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது .

தமிழக மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் மீத்தேன், ஹைட்ரோ கார்பன் மற்றும் நியூட்ரினோ உள்ளிட்ட மக்கள் விரோத திட்டங்களை தமிழகத்தில் செயல்படுத்த விரும்பும் மத்திய அரசின் முயற்சியை கைவிட வேண்டும் என்று வலியுறுத்தியும், நீட் தேர்விற்கு தமிழக மாணவர்களுக்கு நிரந்தரவிலக்கு அளிக்க வேண்டும், காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்திட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு அளிக்க வந்த தமிழர் மறுமலர்ச்சி கழகத்தினரை போலீசார் முன்னதாகவே கைது செய்தனர்.
இதனால் திருப்பூர் பல்லடம் சாலையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது .