கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நிலையில், மேல்மாடியில் வசித்த குடும்பத்தினர் அளித்த தகவலின் பேரில் விரைந்த போலீசார் உடுமலையை சேர்ந்த சூர்யாவை கைது செய்தனர். மற்றொரு குற்றவாளியை தேடி வருகின்றனர்.

Coimbatore: கோவை குனியமுத்தூர் அருகே உள்ள குளத்துப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் திருஞானசம்பந்தம். இவரது மகன் ஜெகதீஷ். ஜெகதீஷின் வீட்டின் கீழ்தளத்தில் அவரது தாயார் வசித்து வந்தார். மேல்தளத்தில் ஜெகதீஷ் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

சம்பவத்தன்று ஜெகதீஷின் தாயார் வீட்டை பூட்டிவிட்டு திருப்பூர் சென்றிருந்தார். பின்னர் ஜெகதீஷ் இரவு 11 மணியளவில் தூங்கச் சென்றுள்ளார்.

இந்நிலையில் நள்ளிரவு 2 மணியளவில் வீட்டு கதவை உடைக்கும் சத்தம் கேட்டதால் ஜெகதீஷ் கீழே சென்று பார்த்துள்ளார். அப்போது தாயார் தங்கி இருந்த வீட்டின் கதவு உடைக்கப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

வீட்டிற்குள் புகுந்த கொள்ளையர்கள் அங்கிருந்த நகைகள், சில்வர் பொருட்கள் மற்றும் ரூ.3 ஆயிரம் பணத்தை எடுத்துக்கொண்டு தப்பிச் செல்ல முயன்றுள்ளனர்.

உடனடியாக ஜெகதீஷ் மற்றும் அவரது குடும்பத்தினர் அக்கம் பக்கத்தினருக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து பொதுமக்கள் அங்கு திரண்டனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த கொள்ளையர்கள் தப்பியோட முயன்றனர். இதில் ஒருவன் மட்டும் பொதுமக்களிடம் கையும் களவுமாக சிக்கினான். இது குறித்து ஜெகதீஷ் குனியமுத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பிடிபட்ட நபரிடம் விசாரணை நடத்தியதில், அவர் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் பகுதியைச் சேர்ந்த சூர்யா என்பது தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார், தப்பியோடிய மேலும் இருவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Newsletter

வார்டு வளர்ச்சிப் பணிகள் புறக்கணிப்பு குற்றச்சாட்டு; கோவையில் தி.மு.க கவுன்சிலர் தர்ணா

கோவை அருகே தென்கரை பேரூராட்சி மன்றக் கூட்டத்தின் போது, தனது வார்டில் வளர்ச்சிப் பணிகள் மற்றும் தூய்மைப் பணிகள் புறக்கணிக...

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...