கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நிலையில், மேல்மாடியில் வசித்த குடும்பத்தினர் அளித்த தகவலின் பேரில் விரைந்த போலீசார் உடுமலையை சேர்ந்த சூர்யாவை கைது செய்தனர். மற்றொரு குற்றவாளியை தேடி வருகின்றனர்.

Coimbatore: கோவை குனியமுத்தூர் அருகே உள்ள குளத்துப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் திருஞானசம்பந்தம். இவரது மகன் ஜெகதீஷ். ஜெகதீஷின் வீட்டின் கீழ்தளத்தில் அவரது தாயார் வசித்து வந்தார். மேல்தளத்தில் ஜெகதீஷ் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

சம்பவத்தன்று ஜெகதீஷின் தாயார் வீட்டை பூட்டிவிட்டு திருப்பூர் சென்றிருந்தார். பின்னர் ஜெகதீஷ் இரவு 11 மணியளவில் தூங்கச் சென்றுள்ளார்.

இந்நிலையில் நள்ளிரவு 2 மணியளவில் வீட்டு கதவை உடைக்கும் சத்தம் கேட்டதால் ஜெகதீஷ் கீழே சென்று பார்த்துள்ளார். அப்போது தாயார் தங்கி இருந்த வீட்டின் கதவு உடைக்கப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

வீட்டிற்குள் புகுந்த கொள்ளையர்கள் அங்கிருந்த நகைகள், சில்வர் பொருட்கள் மற்றும் ரூ.3 ஆயிரம் பணத்தை எடுத்துக்கொண்டு தப்பிச் செல்ல முயன்றுள்ளனர்.

உடனடியாக ஜெகதீஷ் மற்றும் அவரது குடும்பத்தினர் அக்கம் பக்கத்தினருக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து பொதுமக்கள் அங்கு திரண்டனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த கொள்ளையர்கள் தப்பியோட முயன்றனர். இதில் ஒருவன் மட்டும் பொதுமக்களிடம் கையும் களவுமாக சிக்கினான். இது குறித்து ஜெகதீஷ் குனியமுத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பிடிபட்ட நபரிடம் விசாரணை நடத்தியதில், அவர் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் பகுதியைச் சேர்ந்த சூர்யா என்பது தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார், தப்பியோடிய மேலும் இருவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...