கார்ப்பரேட்டுகளுக்காக மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம் கூடாது என வலியுறுத்தல்

கோவை: கார்ப்பரேட்களுக்காக மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம் செய்வதை மத்திய அரசு உடனே கைவிட வேண்டும் என கோவையில் நடைபெற்ற சி.ஐ.டி.யு., தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளர் சம்மேளனத்தின் 8-வது மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.

கோவை: கார்ப்பரேட்களுக்காக மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம் செய்வதை மத்திய அரசு உடனே கைவிட வேண்டும் என கோவையில் நடைபெற்ற சி.ஐ.டி.யு., தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளர் சம்மேளனத்தின் 8-வது மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள லாரி உரிமையாளர் திருமண மண்டபத்தில் சி.ஐ.டி.யு., தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளர் சம்மேளனத்தின் 8-வது மாநில மாநாடு நேற்று தொடங்கியது. நாளை வரை தொடர்ந்து 3 நாட்கள் நடைபெறுகிறது. மாநாட்டின் ஒருபகுதியாக நேற்று பேரணி பொதுக்கூட்டம் நடைபெற்றது. வடகோவை சிந்தாமணி முன்புறம் இருந்து துவங்கிய பேரணியில், ஆயிரக்கணக்கான ஆட்டோ தொழிலாளர்கள் பங்கேற்றனர். வடகோவையில் துவங்கிய பேரணி பூமார்க்கெட், தியாகி குமரன் வீதி உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக சென்று ராஜவீதி தேர்நிலைத் திடலில் முடிவடைந்தது. 



முன்னதாக, பேரணியில் பங்கேற்ற ஆட்டோ தொழிலாளர்கள், பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும். எரிபொருள் விலையை மத்திய அரசே நிர்ணயிக்க வேண்டும். பொது போக்குவரத்தை சீர்குலைத்து கார்ப்பரேட்டுகள் ஆதிக்கம் செய்வதற்கு ஏதுவாக மோட்டார் வாகன சட்ட திருத்தம் மேற்கொள்வதை மத்திய அரசே கைவிட வேண்டும். ஆட்டோ தொழிலை கார்ப்பரேட்டுகள் கபளீகரம் செய்யவதை அனுமதிக்காதே உள்ளிட்ட முழக்கத்தோடு பேரணியில் பங்கேற்றனர். 

இதனைத்தொடர்ந்து, ராஜவீதி தேர்நிலைத் திடலில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், சி.ஐ.டி.யு., மாநில தலைவர் அ.சவுந்திரராஜன் உரையாற்றினார். இப்பேரணியில் ஆட்டோ சம்மேளன தலைவர் எம். சந்திரன், பொதுச்செயலாளர் எம். சிவாஜி, பொருளாளர் ஏ. பழனி, துணை பொதுச்செயலாளர் பி.கே. சுகுமாறன் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.



Newsletter

கோவை விமான நிலையத்தில் இலவச வீல்சேர் சேவைக்கு கட்டாய “டிப்ஸ்“ வசூல் - பயணிகள் புகார்.

கோவை சர்வதேச விமான நிலையத்தில் முதியோர், மாற்றுத்திறனாளிகள், நோயாளிகளுக்கான இலவச வீல்சேர் சேவைக்கு, சில ஊழியர்கள் ரூ.500...

கோவையில் கல்லூரி மாணவியின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - 3 தனிப்படைகள் அமைத்து காவல்துறை தீவிர தேடுதல்

கோவை கள்ளிக்கநாயக்கன்பாளையத்தில் இளம்பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில், சென்னையைச் சேர்ந்த கார்த்...

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...