திருப்பதியில் பா.ஜ.க., தலைவர் அமித்ஷாவின் கார் மீது தாக்குதல் : தெலுங்கு தேச தொண்டர்கள் கைது

திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்யச் சென்ற பா.ஜ.க., தேசிய தலைவர் அமித்ஷாவின் வாகனம் மீது தெலுங்கு தேசம் கட்சி தொண்டர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்யச் சென்ற பா.ஜ.க., தேசிய தலைவர் அமித்ஷாவின் வாகனம் மீது தெலுங்கு தேசம் கட்சி தொண்டர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கர்நாடக மாநில சட்டப்பேரவை தேர்தல் பிரச்சாரம் நேற்று (வியாழக்கிழமை) மாலையுடன் நிறைவடைந்தது. பிரச்சாரத்தை முடித்துவிட்டு இன்று பா.ஜ.க., தலைவர் அமித் ஷா திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார். அதன்பின்பு, கோயிலில் இருந்து கார் மூலம் ரேணிகுண்டா விமான நிலையத்திற்கு சென்றார். அப்போது, திருப்பதி மலை அடிவாரத்தில் கருப்பு கொடியுடன் காத்திருந்த தெலுங்கு தேசம் கட்சி தொண்டர்கள், அமித்ஷாவின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து முழக்கம் எழுப்பினர்.

மேலும், அமித் ஷாவின் காரை மறிக்க முயன்றனர். அப்போது, அமித்ஷா மற்றும் பா.ஜ.க., தொண்டர்கள் சென்ற கார் ஒன்றின் கண்ணாடியை தெலுங்கு தேசம் கட்சியினர் உடைத்தனர். இதனால், பா.ஜ.க., தெலுங்கு தேசம் கட்சியினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதன்பின், கார் கண்ணாடியை உடைத்த தெலுங்கு தேசம் கட்சி தொண்டர்களை போலீஸார் கைது செய்தனர். இதனால், ஆவேசம் அடைந்த தெலுங்கு தேசம் கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீஸார் குண்டுகட்டாக தூக்கி அப்புறப்படுத்தினர்.

ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் விவகாரத்தில் மத்திய அரசு துரோகம் இழைத்து விட்டதாக ஆளும் தெலுங்கு தேசம் குற்றம்சாட்டி வருகிறது. இதனால், மத்தியில் பாஜகவுடனான கூட்டணியை தெலுங்கு தேசம் விலக்கிக் கொண்ட நிலையில், அமித்ஷா கான்வாய் மீது அக்கட்சியினர் தாக்குதலில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...

சிறுபான்மையினருக்கான குறைந்த வட்டி கடன் திட்டங்கள் அறிவிப்பு

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் சிறுபான்மையினருக்கு தனிநபர், சுயஉதவிக்குழு, கைவினை கலைஞர் மற்...

கோவையில் பருவமழை புகார்களுக்கு சிறப்பு எண்கள்: மாநகராட்சி அறிவிப்பு

மழைநீர் தேக்கம், மரம் விழுதல் உள்ளிட்ட அவசர நிலைகள் தொடர்பாக பொதுமக்கள் 81900 00200 என்ற வாட்ஸ் ஆப் எண் மற்றும் மண்டல வா...

தென்மேற்கு பருவமழை: கோவையில் முன்னெச்சரிக்கை பணிகள் தீவிரம்

தென்மேற்கு பருவமழையை முன்னிட்டு கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதிகளில் மழைநீர் தேக்கம் மற்றும் வெள்ள பாதிப்புகளைத் தவிர்க்க...