பாதுகாப்புக்கு துப்பாக்கி ஏந்திய காவலர் வேண்டும்: டாஸ்மாக் பணியாளர் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்

கோவை: மதுபானம் விற்பனை செய்த பணத்தை கொள்ளை அடித்துச் செல்வது வாடிக்கையாகி விட்டதால் டாஸ்மாக் ஊழியர்கள் பணம் செலுத்தச் செல்லும் போது துப்பாக்கி ஏந்திய காவலர் ஒருவரை பாதுகாப்பிற்கு அளிக்க வேண்டும் என்று டாஸ்மாக் பணியாளர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கோவை: மதுபானம் விற்பனை செய்த பணத்தை கொள்ளை அடித்துச் செல்வது வாடிக்கையாகி விட்டதால் டாஸ்மாக் ஊழியர்கள் பணம் செலுத்தச் செல்லும் போது துப்பாக்கி ஏந்திய காவலர் ஒருவரை பாதுகாப்பிற்கு அளிக்க வேண்டும் என்று டாஸ்மாக் பணியாளர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.



தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர் சங்கத்தின் (ஏ.ஐ.டி.யூ.சி) மாநில செயற்குழு கூட்டம் காட்டூரில் உள்ள சங்க அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. சங்கத்தின் மாநில தலைவரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான பெரியசாமி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், பூரண மது விலக்கு கொள்கை காரணமாக 7,000 டாஸ்மாக் பணியாளர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், அரசு மதுவிலக்கு கொள்கையை தெளிவுபடுத்தி கால நிர்ணயம் செய்ய வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும், மதுபான விற்பனை பணத்தை செலுத்தச் செல்லும் டாஸ்மாக் ஊழியர்களைத் தாக்கி பணத்தை கொள்ளை அடித்துச் செல்வதைத் தடுக்க ஊழியர்கள் பணம் செலுத்தச் செல்லும் போது பாதுகாப்பிற்கு துப்பாக்கி ஏந்திய காவலர் அளிக்க வேண்டும், டாஸ்மாக் ஊழியர்களை இ.எஸ்.ஐ திட்டத்தில் இணைக்க வேண்டும், உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்த கூட்டத்தில் ஏ.ஐ.டி.யு.சி., மாநில தலைவர் சுப்புராயன், பொதுச் செயலாளர் மூர்த்தி, முன்னாள் வால்பாறை சட்டமன்ற உறுப்பினரும் மாநில செயலாளருமான ஆறுமுகம், டாஸ்மாக் சங்கத்தின் பொதுச் செயலாளர் தனசேகரன் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள், மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.



Newsletter

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...