கோவை: கோவையில் சி.ஐ.டி.யு., ஆட்டோ சங்க மாநில மாநாடு நாளை தொடங்க உள்ளது.
கோவை: கோவையில் சி.ஐ.டி.யு., ஆட்டோ சங்க மாநில மாநாடு நாளை தொடங்க உள்ளது.
சி.ஐ.டி.யு., தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளர் சம்மேளனத்தின் 8-வது மாநில நாளை தொடங்கி வரும் 13-ம் தேதி வரை மூன்று நாட்கள் கோவையில் நடைபெறுகிறது. 11-ம் தேதி மாநிலம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான ஆட்டோ தொழிலாளர்கள் பங்கேற்கும் காக்கிச்சட்டை பேரணி நடைபெறுகிறது.
வடகோவை சிந்தாமணி முன்புறம் தொடங்கும் இந்த பேரணி பல்வேறு முக்கிய வீதிகள் வழியாகச் சென்று ராஜ வீதி தேர்நிலைத் திடலில் சங்கமிக்க இருக்கிறது. அங்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் சி.ஐ.டி.யு., மாநில தலைவர் அ.சவுந்திராராசன் உள்ளிட்ட தலைவர்கள் சிறப்புரையாற்ற உள்ளனர். இதனையடுத்து, மே 12, 13 ஆகிய இரண்டு நாட்கள் பிரதிநிதிகள் மாநாடு, மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள லாரி உரிமையாளர்கள் சங்க திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது.
இந்த மாநாட்டில், மாநிலம் முழுவதும் உள்ள ஆட்டோ சங்க பிரதிநிதிகள் பங்கேற்று விவாதிக்க உள்ளனர். இதனைத்தொடர்ந்து பல்வேறு முக்கிய தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட உள்ளது. கோவையில் நடைபெறும் இம்மாநாட்டை வெற்றிகரமாக்கிட ஆட்டோ தொழிலாளர்கள் பெரும் உற்சாகமாய் இப்பணியை முன்னெடுத்து வருகின்றனர்.
சி.ஐ.டி.யு., தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளர் சம்மேளனத்தின் 8-வது மாநில நாளை தொடங்கி வரும் 13-ம் தேதி வரை மூன்று நாட்கள் கோவையில் நடைபெறுகிறது. 11-ம் தேதி மாநிலம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான ஆட்டோ தொழிலாளர்கள் பங்கேற்கும் காக்கிச்சட்டை பேரணி நடைபெறுகிறது.
வடகோவை சிந்தாமணி முன்புறம் தொடங்கும் இந்த பேரணி பல்வேறு முக்கிய வீதிகள் வழியாகச் சென்று ராஜ வீதி தேர்நிலைத் திடலில் சங்கமிக்க இருக்கிறது. அங்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் சி.ஐ.டி.யு., மாநில தலைவர் அ.சவுந்திராராசன் உள்ளிட்ட தலைவர்கள் சிறப்புரையாற்ற உள்ளனர். இதனையடுத்து, மே 12, 13 ஆகிய இரண்டு நாட்கள் பிரதிநிதிகள் மாநாடு, மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள லாரி உரிமையாளர்கள் சங்க திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது.
இந்த மாநாட்டில், மாநிலம் முழுவதும் உள்ள ஆட்டோ சங்க பிரதிநிதிகள் பங்கேற்று விவாதிக்க உள்ளனர். இதனைத்தொடர்ந்து பல்வேறு முக்கிய தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட உள்ளது. கோவையில் நடைபெறும் இம்மாநாட்டை வெற்றிகரமாக்கிட ஆட்டோ தொழிலாளர்கள் பெரும் உற்சாகமாய் இப்பணியை முன்னெடுத்து வருகின்றனர்.