ஆட்டோ சங்க மாநில மாநாடு கோவையில் நாளை தொடக்கம்

கோவை: கோவையில் சி.ஐ.டி.யு., ஆட்டோ சங்க மாநில மாநாடு நாளை தொடங்க உள்ளது.

கோவை: கோவையில் சி.ஐ.டி.யு., ஆட்டோ சங்க மாநில மாநாடு நாளை தொடங்க உள்ளது.

சி.ஐ.டி.யு., தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளர் சம்மேளனத்தின் 8-வது மாநில நாளை தொடங்கி வரும் 13-ம் தேதி வரை மூன்று நாட்கள் கோவையில் நடைபெறுகிறது. 11-ம் தேதி மாநிலம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான ஆட்டோ தொழிலாளர்கள் பங்கேற்கும் காக்கிச்சட்டை பேரணி நடைபெறுகிறது.

வடகோவை சிந்தாமணி முன்புறம் தொடங்கும் இந்த பேரணி பல்வேறு முக்கிய வீதிகள் வழியாகச் சென்று ராஜ வீதி தேர்நிலைத் திடலில் சங்கமிக்க இருக்கிறது. அங்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் சி.ஐ.டி.யு., மாநில தலைவர் அ.சவுந்திராராசன் உள்ளிட்ட தலைவர்கள் சிறப்புரையாற்ற உள்ளனர். இதனையடுத்து, மே 12, 13 ஆகிய இரண்டு நாட்கள் பிரதிநிதிகள் மாநாடு, மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள லாரி உரிமையாளர்கள் சங்க திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது.

இந்த மாநாட்டில், மாநிலம் முழுவதும் உள்ள ஆட்டோ சங்க பிரதிநிதிகள் பங்கேற்று விவாதிக்க உள்ளனர். இதனைத்தொடர்ந்து பல்வேறு முக்கிய தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட உள்ளது. கோவையில் நடைபெறும் இம்மாநாட்டை வெற்றிகரமாக்கிட ஆட்டோ தொழிலாளர்கள் பெரும் உற்சாகமாய் இப்பணியை முன்னெடுத்து வருகின்றனர்.

Newsletter

கோவையில் கல்லூரி மாணவியின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - 3 தனிப்படைகள் அமைத்து காவல்துறை தீவிர தேடுதல்

கோவை கள்ளிக்கநாயக்கன்பாளையத்தில் இளம்பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில், சென்னையைச் சேர்ந்த கார்த்...

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...