மலர் கண்காட்சியையொட்டி நீலகிரியில் 18-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

நீலகிரி: உலக புகழ்பெற்ற உதகை அரசு தாவரவியல் பூங்காவில் 122-வது மலர் கண்காட்சி நடைபெறுவதையொட்டி வரும் 18-ம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

நீலகிரி: உலக புகழ்பெற்ற உதகை அரசு தாவரவியல் பூங்காவில் 122-வது மலர் கண்காட்சி நடைபெறுவதையொட்டி வரும் 18-ம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

இயற்கை எழில் கொஞ்சும் நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் மே மாதத்தில் கோடை சீசன் கொண்டாடப்படுவது வழக்கம். இச்சமயங்களில் வரும் இலட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகளை கவர பல்வேறு கோடை விழாக்கள் நடத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக, உலக புகழ்பெற்ற உதகை அரசு தாவரவியல் பூங்காவில் நடைபெறும் மலர் கண்காட்சிக்கு சற்று மவுசு அதிகம். இதனைக் காண உலக முழுவதிலும் இருந்து வரும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசித்து செல்கின்றனர்.

இந்நிலையில், இந்தாண்டு 122-வது மலர் கண்காட்சி 18-ம் தேதி துவங்கி மூன்று நாட்கள் நடைபெறுகிறது. இதையொட்டி, மாவட்டத்தில் உள்ள அனைவரும் மலர் கண்காட்சியைக் கண்டு ரசிக்கும் வகையில், 18-ம் தேதி மாவட்டத்திலுள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா உத்தரவிட்டுள்ளார். இந்த நாட்களில் மாவட்ட கருவூலம் மற்றும் சார்நிலை கருவூலங்கள் அரசு பாதுகாப்புக்கான அவசர அலுவல்களைக் கவனிக்கும் வகையில், குறிப்பிட்ட பணியாளர்களுடன் செயல்படும்.18-ம் தேதி விடுமுறை நாளினை ஈடுசெய்யும் வகையில் எதிர்வரும் 25-ம் தேதி இம்மாவட்டத்திற்கு பணி நாளாக செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவையில் கல்லூரி மாணவியின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - 3 தனிப்படைகள் அமைத்து காவல்துறை தீவிர தேடுதல்

கோவை கள்ளிக்கநாயக்கன்பாளையத்தில் இளம்பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில், சென்னையைச் சேர்ந்த கார்த்...

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...