கடந்த 24 மணிநேரத்தில் கோவையில் 24 மி.மீ. மழை பதிவு

தமிழகத்தில் மாலை நேரங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் கோவை மாவட்டத்தில் 24 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

தமிழகத்தில் மாலை நேரங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் கோவை மாவட்டத்தில் 24 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் கடந்த வாரம் தொடங்கிய நிலையில், பல இடங்களில் மாலை நேரங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. குறிப்பாக, நீலகிரி, கோவை, மதுரை மற்றும் திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் எதிர்பாராத அளவுக்கு இடி, மின்னலுடன் மழை கொட்டியது. மேலும், 13-ம் தேதி வரை தமிழகத்தில் மிதமான அல்லது கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையமும் எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்த நிலையில், நேற்று மதுரை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்தது. குறிப்பாக திருச்சி மாவட்டம் துவக்குடி மற்றும் மதுரையின் வடக்கு பகுதியான மேலூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இடியுடன் கூடிய மழை வெளுத்து வாங்கியது.

அதிகபட்சமாக, கடந்த 24 மணி நேரத்தில், மேலூரில் 60 மி.மீ. மழையும், துவக்குடி (இஸ்ரோ)வில் 57 மி.மீ. மழையும், மதுரை (இஸ்ரோ) 42 மி.மீ. மழையும், பாலக்கோடு 40 மி.மீ. மழையும், பெருந்துறை 31 மி.மீ. மழையும், போடி நாயக்கனூர் 26 மி.மீ. மழையும், கோவை (பெரிய நாயக்கன் பாளையம்) மற்றும் விருதுநகரில் தலா 24 மி.மீ. மழையும் பதிவாகியுள்ளது.



இனி வரும் நாட்களில் மேற்கு தொடர்ச்சி மழையை ஒட்டியுள்ள தமிழகம், கேரளா மற்றும் தெற்கு உள்கர்நாடகா மாநிலங்களில் இடியுடன் கூடிய பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது. மேலும், தென் தமிழகம் மற்றும் மேற்கு உள் தமிழக மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக, வெயிலின் தாக்கம் தணிந்துள்ளது, இதனால், பொதுமக்கள் சற்று நிம்மதியடைந்துள்ளனர்.

Newsletter

கோவையில் கல்லூரி மாணவியின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - 3 தனிப்படைகள் அமைத்து காவல்துறை தீவிர தேடுதல்

கோவை கள்ளிக்கநாயக்கன்பாளையத்தில் இளம்பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில், சென்னையைச் சேர்ந்த கார்த்...

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...