பேராசிரியை நிர்மலா தேவியை மே 23 வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவு

மாணவிகளை தவறான பாதைக்கு வழிநடத்த முயன்ற வழக்கில், பேராசிரியை நிர்மலா தேவியை வரும் 23-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க விருதுநகர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மாணவிகளை தவறான பாதைக்கு வழிநடத்த முயன்ற வழக்கில், பேராசிரியை நிர்மலா தேவியை வரும் 23-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க விருதுநகர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரியின் உதவி பேராசிரியை நிர்மலாதேவி, மாணவிகளை தவறான பாதைக்கு வழிநடத்த முயன்ற சம்பவம் தமிழக வரலாற்றில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக, அருப்புக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து கடந்த ஏப்., 16-ந்தேதி நிர்மலா தேவி கைது செய்யப்பட்டு, மதுரை மத்திய சிறையில் நிர்மலாதேவி அடைக்கப்பட்டார்.

இதனிடையே, நிர்மலா தேவி விவகாரம் சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றப்பட்டது. பின்னர், அவர் சி.பி.சி.ஐ.டி., காவலில் எடுக்கப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டு வந்தார். இந்த நிலையில், பேராசிரியை நிர்மலா தேவி மதுரை சிறையில் இருந்து விருதுநகர் கொண்டு செல்லப்பட்டார். நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடைவதால், போலீசார் அவரை விருதுநகர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்டுத்தினர். அப்போது, அவரை மே 23-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

Newsletter

கோவையில் கல்லூரி மாணவியின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - 3 தனிப்படைகள் அமைத்து காவல்துறை தீவிர தேடுதல்

கோவை கள்ளிக்கநாயக்கன்பாளையத்தில் இளம்பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில், சென்னையைச் சேர்ந்த கார்த்...

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...