விற்பனைக்கு தயாரான பொது இடம் மீட்பு : மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை

கோவை : தனியார் குடியிருப்பு பகுதியில் ஆக்கிரமித்து விற்பனை செய்யப்பட இருந்த 23 சென்ட் அளவிலான பொது இடத்தை கோவை மாநகராட்சி அதிகாரிகள் மீட்டு நடவடிக்கை எடுத்துள்ளனர்.

கோவை : தனியார் குடியிருப்பு பகுதியில் ஆக்கிரமித்து விற்பனை செய்யப்பட இருந்த 23 சென்ட் அளவிலான பொது இடத்தை கோவை மாநகராட்சி அதிகாரிகள் மீட்டு நடவடிக்கை எடுத்துள்ளனர். 

மாநகராட்சியின் கிழக்கு மண்டலத்திற்கு உட்பட்ட 64-வது வார்டில், சுமார் 2.30 ஏக்கர் பரப்பளவில் ராம் ரெசிடென்சி என்ற குடியிருப்பு வளாகம் அமைந்துள்ளது. அங்கு 23 சென்ட் அளவிற்கு மாநகராட்சிக்கு சொந்தமான பொது இடம் அமைந்துள்ளது.



பூங்கா, விளையாட்டு மைதானம் போன்ற பொதுப் பயன்பாட்டிற்காக ஒதுக்கப்பட வேண்டிய அந்த இடத்தின் மதிப்பு சுமார் ரூ.2 கோடி ஆக இருக்கும் என்று கருதப்படுகிறது. சுற்றிலும் கம்பி வேலி அமைத்து அந்த இடத்தை விற்பனை செய்ய, குடியிருப்பு உரிமையாளர்கள் முயற்சி செய்துள்ளனர்.

இதுகுறித்து சவுரிபாளையத்தை சேர்ந்த ரிசர்வ் சைட் மீட்பு செயற்பாட்டாளரான தியாகராஜனுக்கு தகவல் கிடைத்தது. தொடர்ந்து, பொது இடம் ஆக்கிரமிப்பு தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகளிடம் அவர் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில், மாநகராட்சி ஆணையர் விஜயகார்த்திகேயன் உத்தரவின் பேரில், கிழக்கு மண்டல உதவி நகரமைப்பு அலுவலர் ஹேமலதா மற்றும் அதிகாரிகள் நேற்று அந்த குடியிருப்பு வளாகத்தில் அமைந்துள்ள பொது இடத்தை ஆய்வு செய்தனர்.

இதையடுத்து, ஆக்கிரமிக்கப்பட இருந்த பொது இடத்தை மீட்ட அதிகாரிகள், 'இது மாநகராட்சிக்கு சொந்தமான இடம்' என்ற அறிவிப்பு பலகையை வைத்துச் சென்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் இலவச வீல்சேர் சேவைக்கு கட்டாய “டிப்ஸ்“ வசூல் - பயணிகள் புகார்.

கோவை சர்வதேச விமான நிலையத்தில் முதியோர், மாற்றுத்திறனாளிகள், நோயாளிகளுக்கான இலவச வீல்சேர் சேவைக்கு, சில ஊழியர்கள் ரூ.500...

கோவையில் கல்லூரி மாணவியின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - 3 தனிப்படைகள் அமைத்து காவல்துறை தீவிர தேடுதல்

கோவை கள்ளிக்கநாயக்கன்பாளையத்தில் இளம்பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில், சென்னையைச் சேர்ந்த கார்த்...

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...