கோவை: கோவை மாவட்டம் நரசிபுரம் அருகே நாட்டு வெடிகுண்டு வெடித்ததில் படுகாயமடைந்த காட்டு யானை, கால்நடை மருத்துவக் குழுவினரின் சிகிச்சைக்குப் பிறகு மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றது.
கோவை: கோவை மாவட்டம் நரசிபுரம் அருகே நாட்டு வெடிகுண்டு வெடித்ததில் படுகாயமடைந்த காட்டு யானை, கால்நடை மருத்துவக் குழுவினரின் சிகிச்சைக்குப் பிறகு மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றது.
நரசிபுரம் வனப்பகுதியில் உள்ள விவசாய தோட்டங்களில் காட்டு பன்றிகள் வராமல் தடுக்க நாட்டுவெடிகுண்டு வைக்கப்பட்டி வழக்கம். அதன்படி தோட்டங்களில் சட்டவிரோதமாக விவசாயிகள் நாட்டுவெடிகுண்டுகள் வைத்துள்ளனர். இதையடுத்து, எதிர்பாராதவிதமாக நாட்டு வெடிகுண்டை கடித்ததில், சுமார் 55 வயதுடைய காட்டு யானையின் வாயில் காயம் ஏற்பட்டுள்ளது. காயத்துடன் சுற்றித்திருந்த அந்த யானையை வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வந்தனர். இந்நிலையில், நரசிபுரம் அருகே சுந்தராவயல் பகுதியில் உள்ள வனப்பகுதியில் காட்டு யானை நேற்று மாலை மயங்கி விழுந்தது.
இதைத் தொடர்ந்து, வனக் கால்நடை மருத்துவக் குழுவினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, யானைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. மேலும், சத்துப் பொருட்களான குளுகோஸ், பசுந் தீவனங்கள் உள்ளிட்டவைக் கொடுக்கப்பட்டு, ஜே.சி.பி. இயந்திரத்தின் உதவியுடன் யானை தூக்கி நிறுத்த முயற்சி செய்யப்பட்டது. இதனால், உடல்நலம் தேறிய காட்டு யானை, மெதுவாகக் கால்களை தரையில் ஊன்றி வனப்பகுதிக்குள் மீண்டும் சென்றது. இது குறித்து மருத்துவக் குழுவைச் சேர்ந்த என்.எஸ்., மனோகரன் கூறுகையில், "பொதுவாக பிற காட்டு யானைகளைப் போலவே, இந்த யானையும் குடல் புழுவால் பாதிக்கப்பட்டுள்ளது" என்றார்.

இதனிடையே, உடல்நலம் பாதித்த காட்டு யானை மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றதால் மகிழ்ச்சியடைந்த வனத்துறையினர், சிகிச்சைப் பெற்ற யானை தொடர்ந்து கண்காணிக்கப்படும் எனத் தெரிவித்தனர்.

நரசிபுரம் வனப்பகுதியில் உள்ள விவசாய தோட்டங்களில் காட்டு பன்றிகள் வராமல் தடுக்க நாட்டுவெடிகுண்டு வைக்கப்பட்டி வழக்கம். அதன்படி தோட்டங்களில் சட்டவிரோதமாக விவசாயிகள் நாட்டுவெடிகுண்டுகள் வைத்துள்ளனர். இதையடுத்து, எதிர்பாராதவிதமாக நாட்டு வெடிகுண்டை கடித்ததில், சுமார் 55 வயதுடைய காட்டு யானையின் வாயில் காயம் ஏற்பட்டுள்ளது. காயத்துடன் சுற்றித்திருந்த அந்த யானையை வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வந்தனர். இந்நிலையில், நரசிபுரம் அருகே சுந்தராவயல் பகுதியில் உள்ள வனப்பகுதியில் காட்டு யானை நேற்று மாலை மயங்கி விழுந்தது.
இதைத் தொடர்ந்து, வனக் கால்நடை மருத்துவக் குழுவினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, யானைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. மேலும், சத்துப் பொருட்களான குளுகோஸ், பசுந் தீவனங்கள் உள்ளிட்டவைக் கொடுக்கப்பட்டு, ஜே.சி.பி. இயந்திரத்தின் உதவியுடன் யானை தூக்கி நிறுத்த முயற்சி செய்யப்பட்டது. இதனால், உடல்நலம் தேறிய காட்டு யானை, மெதுவாகக் கால்களை தரையில் ஊன்றி வனப்பகுதிக்குள் மீண்டும் சென்றது. இது குறித்து மருத்துவக் குழுவைச் சேர்ந்த என்.எஸ்., மனோகரன் கூறுகையில், "பொதுவாக பிற காட்டு யானைகளைப் போலவே, இந்த யானையும் குடல் புழுவால் பாதிக்கப்பட்டுள்ளது" என்றார்.

இதனிடையே, உடல்நலம் பாதித்த காட்டு யானை மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றதால் மகிழ்ச்சியடைந்த வனத்துறையினர், சிகிச்சைப் பெற்ற யானை தொடர்ந்து கண்காணிக்கப்படும் எனத் தெரிவித்தனர்.
