திருப்பூர்: உயர்நீதிமன்ற தீர்ப்பின்படி, திருப்பூர் மாவட்டம் அவினாசி திருக்கோயில் திருமண மண்டபங்களை ஒப்படைக்க காலதாமதம் செய்து வரும் சார் ஆட்சியர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர்: உயர்நீதிமன்ற தீர்ப்பின்படி, திருப்பூர் மாவட்டம் அவினாசி திருக்கோயில் திருமண மண்டபங்களை ஒப்படைக்க காலதாமதம் செய்து வரும் சார் ஆட்சியர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
அவினாசி லிங்கேஸ்வரர் திருக்கோயிலுக்கு சொந்தமான இரு திருமண மண்டபங்களை தனியார் அமைப்பினர் சொந்தம் கொண்டாடி வந்தனர். இதனையடுத்து, கோவில் நிர்வாகம் சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. நீண்ட நாட்களாக நடந்த இந்த வழக்கில் கடந்த மாதம் சென்னை உயர்நீதிமன்றம், திருக்கோயில் வசம் திருமண மண்டபங்களை ஒப்படைக்கத் தீர்ப்பு வழங்கியது.
இதனையடுத்து, மாவட்ட நிர்வாகத்திடம் உள்ள மண்டபத்தின் சாவிகளை திருக்கோயில் வசம் ஒப்படைக்காமல் திருப்பூர் சார் ஆட்சியர் ஷ்ரவண்குமார் இருந்து வருவதாகக் கூறப்படுகிறது. எனவே, உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை மதிக்காமல் காலம் தாழ்த்தி வரும் சார் ஆட்சியர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது.
அவினாசி லிங்கேஸ்வரர் திருக்கோயிலுக்கு சொந்தமான இரு திருமண மண்டபங்களை தனியார் அமைப்பினர் சொந்தம் கொண்டாடி வந்தனர். இதனையடுத்து, கோவில் நிர்வாகம் சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. நீண்ட நாட்களாக நடந்த இந்த வழக்கில் கடந்த மாதம் சென்னை உயர்நீதிமன்றம், திருக்கோயில் வசம் திருமண மண்டபங்களை ஒப்படைக்கத் தீர்ப்பு வழங்கியது.
இதனையடுத்து, மாவட்ட நிர்வாகத்திடம் உள்ள மண்டபத்தின் சாவிகளை திருக்கோயில் வசம் ஒப்படைக்காமல் திருப்பூர் சார் ஆட்சியர் ஷ்ரவண்குமார் இருந்து வருவதாகக் கூறப்படுகிறது. எனவே, உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை மதிக்காமல் காலம் தாழ்த்தி வரும் சார் ஆட்சியர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது.