கோவை: கிருஷ்ணசாமியின் மறைவுக்கு மத்திய, மாநில அரசுகளே பொறுப்பு என்பதால் மாணவர் கஸ்தூரி மகாலிங்கத்தின் முழு கல்வி செலவையும் தமிழக அரசே ஏற்க வேண்டும் என்று எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில தலைவர் தெஹ்லான் பாகவி வலியுறுத்தியுள்ளார்.
கோவை: கிருஷ்ணசாமியின் மறைவுக்கு மத்திய, மாநில அரசுகளே பொறுப்பு என்பதால் மாணவர் கஸ்தூரி மகாலிங்கத்தின் முழு கல்வி செலவையும் தமிழக அரசே ஏற்க வேண்டும் என்று எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில தலைவர் தெஹ்லான் பாகவி வலியுறுத்தியுள்ளார்.
கோவையில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
நீட் விவகாரத்தில் தமிழக அரசு முழுமையாக தோற்றுவிட்டது. நீட் வேண்டாம் என தமிழகம் போராடியதற்காக, மாணவர்களை மத்திய அரசு அலைக்கழித்துள்ளது. கிருஷ்ணசாமியின் மறைவிற்கு மத்திய, மாநில அரசுகளே பொறுப்பு. மாணவருக்கு இழப்பீடு வழங்குவதற்கு பதிலாக, அவரின் கல்வி செலவு முழுவதையும் தமிழக அரசே ஏற்க வேண்டும்.
ஆளுநர் மீது நிர்மலா தேவி எழுப்பிய புகார்களின் நிலை என்ன? கருத்தியல் ரீதியாக எஸ்.டி.பி.ஐ தொடர்ந்து பாஜக, ஆர்.எஸ்.எஸ்-ஐ எதிர்த்து வருவதால் பா.ஜ.க., அரசு வன்மத்துடன் எங்கள் மீது பொய் வழக்குகளைப் பதிவு செய்கிறது. ராமஜெயம் கொலை வழக்கு உள்ளிட்ட பல்வேறு கொலை வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், சசிக்குமாரின் கொலை வழக்கு மட்டும் என்.ஐ.ஏ-விடம் ஒப்படைக்கப்பட்டது ஏன்? உக்கடம் மேம்பாலம் கட்டுமானம் தொடர்பாக மக்களிடையே உள்ள சந்தேகங்களை களைந்துவிட்டு, ஆத்துப்பாலம் வரை மேம்பாலத்தை நீட்டிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கோவையில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
நீட் விவகாரத்தில் தமிழக அரசு முழுமையாக தோற்றுவிட்டது. நீட் வேண்டாம் என தமிழகம் போராடியதற்காக, மாணவர்களை மத்திய அரசு அலைக்கழித்துள்ளது. கிருஷ்ணசாமியின் மறைவிற்கு மத்திய, மாநில அரசுகளே பொறுப்பு. மாணவருக்கு இழப்பீடு வழங்குவதற்கு பதிலாக, அவரின் கல்வி செலவு முழுவதையும் தமிழக அரசே ஏற்க வேண்டும்.
ஆளுநர் மீது நிர்மலா தேவி எழுப்பிய புகார்களின் நிலை என்ன? கருத்தியல் ரீதியாக எஸ்.டி.பி.ஐ தொடர்ந்து பாஜக, ஆர்.எஸ்.எஸ்-ஐ எதிர்த்து வருவதால் பா.ஜ.க., அரசு வன்மத்துடன் எங்கள் மீது பொய் வழக்குகளைப் பதிவு செய்கிறது. ராமஜெயம் கொலை வழக்கு உள்ளிட்ட பல்வேறு கொலை வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், சசிக்குமாரின் கொலை வழக்கு மட்டும் என்.ஐ.ஏ-விடம் ஒப்படைக்கப்பட்டது ஏன்? உக்கடம் மேம்பாலம் கட்டுமானம் தொடர்பாக மக்களிடையே உள்ள சந்தேகங்களை களைந்துவிட்டு, ஆத்துப்பாலம் வரை மேம்பாலத்தை நீட்டிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.