ஆட்சியர் அலுவலகத்திற்கு மண்ணெண்ணெய்யுடன் வந்த மூதாட்டி: விபரம் தெரியாமல் வந்ததாக விளக்கம்

கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மண்ணெண்ணெய் கேனுடன் மூதாட்டி ஒருவர் மனு அளிக்க வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மண்ணெண்ணெய் கேனுடன் மூதாட்டி ஒருவர் மனு அளிக்க வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை ஆலாந்துறை போயர் காலணி பகுதியை சேர்ந்தவர் வீரமணி என்கின்ற வீரம்மாள்(65). இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்ப்பு முகாமில் மனு அளிக்க வந்திருந்தார். வழக்கமாக மனு அளிக்க வருபவர்களிடம் சோதனை நடத்தும் காவலர்கள் மூதாட்டியின் கையில் இருந்த பையை சோதனை செய்த போது அவரிடம் அரை லிட்டர் மண்ணெண்ணெய் இருந்தது தெரியவந்தது.



தொடர்ந்து, அவரிடம் இருந்து மண்ணெண்ணெய் கேனை பறித்த போலீசார் விசாரித்தனர். அப்போது, தனக்குச் சொந்தமான வீட்டை தங்கை ஏமாற்றி விட்டதால் மனு அளிக்க வந்திருப்பதாக மூதாட்டி தெரிவித்தார். மேலும், குனியமுத்தூரில் வசிக்கும் தனது மகள் கேட்டு கொண்டதின் காரணமாக, அவரிடம் கொடுக்க மண்ணெண்ணெய் வாங்கி வந்ததாகக் கூறிய மூதாட்டி, அதை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குக் கொண்டு வரக் கூடாது என்று தனக்கு விபரம் தெரியாது என பரிதாபமாக கூறினார்.

இதனைத் தொடர்ந்து, பெண் காவலர்கள் உதவியுடன் மனு அளிக்கச் சென்றவர், மனு அளித்த பின்னர் பாட்டிலை திரும்ப வாங்கிச் சென்றார்.

Newsletter

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...