கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மண்ணெண்ணெய் கேனுடன் மூதாட்டி ஒருவர் மனு அளிக்க வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மண்ணெண்ணெய் கேனுடன் மூதாட்டி ஒருவர் மனு அளிக்க வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை ஆலாந்துறை போயர் காலணி பகுதியை சேர்ந்தவர் வீரமணி என்கின்ற வீரம்மாள்(65). இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்ப்பு முகாமில் மனு அளிக்க வந்திருந்தார். வழக்கமாக மனு அளிக்க வருபவர்களிடம் சோதனை நடத்தும் காவலர்கள் மூதாட்டியின் கையில் இருந்த பையை சோதனை செய்த போது அவரிடம் அரை லிட்டர் மண்ணெண்ணெய் இருந்தது தெரியவந்தது.

தொடர்ந்து, அவரிடம் இருந்து மண்ணெண்ணெய் கேனை பறித்த போலீசார் விசாரித்தனர். அப்போது, தனக்குச் சொந்தமான வீட்டை தங்கை ஏமாற்றி விட்டதால் மனு அளிக்க வந்திருப்பதாக மூதாட்டி தெரிவித்தார். மேலும், குனியமுத்தூரில் வசிக்கும் தனது மகள் கேட்டு கொண்டதின் காரணமாக, அவரிடம் கொடுக்க மண்ணெண்ணெய் வாங்கி வந்ததாகக் கூறிய மூதாட்டி, அதை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குக் கொண்டு வரக் கூடாது என்று தனக்கு விபரம் தெரியாது என பரிதாபமாக கூறினார்.
இதனைத் தொடர்ந்து, பெண் காவலர்கள் உதவியுடன் மனு அளிக்கச் சென்றவர், மனு அளித்த பின்னர் பாட்டிலை திரும்ப வாங்கிச் சென்றார்.
கோவை ஆலாந்துறை போயர் காலணி பகுதியை சேர்ந்தவர் வீரமணி என்கின்ற வீரம்மாள்(65). இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்ப்பு முகாமில் மனு அளிக்க வந்திருந்தார். வழக்கமாக மனு அளிக்க வருபவர்களிடம் சோதனை நடத்தும் காவலர்கள் மூதாட்டியின் கையில் இருந்த பையை சோதனை செய்த போது அவரிடம் அரை லிட்டர் மண்ணெண்ணெய் இருந்தது தெரியவந்தது.
தொடர்ந்து, அவரிடம் இருந்து மண்ணெண்ணெய் கேனை பறித்த போலீசார் விசாரித்தனர். அப்போது, தனக்குச் சொந்தமான வீட்டை தங்கை ஏமாற்றி விட்டதால் மனு அளிக்க வந்திருப்பதாக மூதாட்டி தெரிவித்தார். மேலும், குனியமுத்தூரில் வசிக்கும் தனது மகள் கேட்டு கொண்டதின் காரணமாக, அவரிடம் கொடுக்க மண்ணெண்ணெய் வாங்கி வந்ததாகக் கூறிய மூதாட்டி, அதை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குக் கொண்டு வரக் கூடாது என்று தனக்கு விபரம் தெரியாது என பரிதாபமாக கூறினார்.
இதனைத் தொடர்ந்து, பெண் காவலர்கள் உதவியுடன் மனு அளிக்கச் சென்றவர், மனு அளித்த பின்னர் பாட்டிலை திரும்ப வாங்கிச் சென்றார்.