கோவையில் ஒரு நாளில் 6 செ.மீ மழை பதிவு

கோவை : மாவட்டத்தில் நேற்று பெய்த மழை அளவின் படி 6 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

கோவை : மாவட்டத்தில் நேற்று பெய்த மழை அளவின் படி 6 செ.மீ மழை பதிவாகியுள்ளது. 

கோவையில் கடந்த நான்கு நாட்களாக சூறாவளிக் காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. மாலை மற்றும் இரவு நேரங்களில் பெய்யும் இந்த கனமழையால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். அதே நேரத்தில் மழையின் போது நகரின் பல இடங்களில் மின்தடை ஏற்படுவதால் பொதுமக்கள் அவதியும் அடைந்தனர். 

இந்த நிலையில், நேற்று இரவு சுமார் 10 மணியளவில் நகரின் பல்வேறு இடங்களில் இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. மாவட்டம் முழுவதும் பெய்த இந்த மழை 6 செ.மீ-ஆக பதிவாகியுள்ளது. மாநகர பகுதிகளில் மட்டும் 2 முதல் 3 செ.மீ மழை பதிவாகியுள்ளது. 

திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டத்தின் பகுதிகளில் கோவைக்கு முன்னதாகவே இந்த மழை தொடங்கியது. திருப்பூரில் அதிகபட்சமாக 12 செ.மீ வரை மழை பெய்தது. சத்தியமங்கலத்தில் 10 செ.மீ மழையும் பெய்துள்ளது. 

கொங்கு மண்டலத்தில் இன்னும் சற்று நாட்களுக்கு இந்த மழை தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Newsletter

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...