கோவையில் ஒரு நாளில் 6 செ.மீ மழை பதிவு

கோவை : மாவட்டத்தில் நேற்று பெய்த மழை அளவின் படி 6 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

கோவை : மாவட்டத்தில் நேற்று பெய்த மழை அளவின் படி 6 செ.மீ மழை பதிவாகியுள்ளது. 

கோவையில் கடந்த நான்கு நாட்களாக சூறாவளிக் காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. மாலை மற்றும் இரவு நேரங்களில் பெய்யும் இந்த கனமழையால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். அதே நேரத்தில் மழையின் போது நகரின் பல இடங்களில் மின்தடை ஏற்படுவதால் பொதுமக்கள் அவதியும் அடைந்தனர். 

இந்த நிலையில், நேற்று இரவு சுமார் 10 மணியளவில் நகரின் பல்வேறு இடங்களில் இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. மாவட்டம் முழுவதும் பெய்த இந்த மழை 6 செ.மீ-ஆக பதிவாகியுள்ளது. மாநகர பகுதிகளில் மட்டும் 2 முதல் 3 செ.மீ மழை பதிவாகியுள்ளது. 

திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டத்தின் பகுதிகளில் கோவைக்கு முன்னதாகவே இந்த மழை தொடங்கியது. திருப்பூரில் அதிகபட்சமாக 12 செ.மீ வரை மழை பெய்தது. சத்தியமங்கலத்தில் 10 செ.மீ மழையும் பெய்துள்ளது. 

கொங்கு மண்டலத்தில் இன்னும் சற்று நாட்களுக்கு இந்த மழை தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Newsletter

ஆழியாறு அணை நீர்மட்டம் 65.4 அடியாக உயர்வு

ஆனைமலை ஆழியாறு அணையின் நீர்மட்டம் மே 26 நிலவரப்படி 65.4 அடியாக உள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக வினாட...

காலவரையற்ற வேலை நிறுத்தம்: திருப்பூர் மாவட்டத்தில் 197 டாஸ்மாக் கடைகள் மூடல்

திருப்பூரில் காலி மது பாட்டில்கள் மீட்பு பணிக்கு தனி ஊழியர் நியமனம் கோரி டாஸ்மாக் பணியாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்....

கோவை விமான நிலையத்தில் இலவச வீல்சேர் சேவைக்கு கட்டாய “டிப்ஸ்“ வசூல் - பயணிகள் புகார்.

கோவை சர்வதேச விமான நிலையத்தில் முதியோர், மாற்றுத்திறனாளிகள், நோயாளிகளுக்கான இலவச வீல்சேர் சேவைக்கு, சில ஊழியர்கள் ரூ.500...

கோவையில் கல்லூரி மாணவியின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - 3 தனிப்படைகள் அமைத்து காவல்துறை தீவிர தேடுதல்

கோவை கள்ளிக்கநாயக்கன்பாளையத்தில் இளம்பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில், சென்னையைச் சேர்ந்த கார்த்...

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...