கோவையில் ஒரு நாளில் 6 செ.மீ மழை பதிவு

கோவை : மாவட்டத்தில் நேற்று பெய்த மழை அளவின் படி 6 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

கோவை : மாவட்டத்தில் நேற்று பெய்த மழை அளவின் படி 6 செ.மீ மழை பதிவாகியுள்ளது. 

கோவையில் கடந்த நான்கு நாட்களாக சூறாவளிக் காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. மாலை மற்றும் இரவு நேரங்களில் பெய்யும் இந்த கனமழையால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். அதே நேரத்தில் மழையின் போது நகரின் பல இடங்களில் மின்தடை ஏற்படுவதால் பொதுமக்கள் அவதியும் அடைந்தனர். 

இந்த நிலையில், நேற்று இரவு சுமார் 10 மணியளவில் நகரின் பல்வேறு இடங்களில் இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. மாவட்டம் முழுவதும் பெய்த இந்த மழை 6 செ.மீ-ஆக பதிவாகியுள்ளது. மாநகர பகுதிகளில் மட்டும் 2 முதல் 3 செ.மீ மழை பதிவாகியுள்ளது. 

திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டத்தின் பகுதிகளில் கோவைக்கு முன்னதாகவே இந்த மழை தொடங்கியது. திருப்பூரில் அதிகபட்சமாக 12 செ.மீ வரை மழை பெய்தது. சத்தியமங்கலத்தில் 10 செ.மீ மழையும் பெய்துள்ளது. 

கொங்கு மண்டலத்தில் இன்னும் சற்று நாட்களுக்கு இந்த மழை தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...

ஆழியாறு அணை நீர்மட்டம் 65.4 அடியாக உயர்வு

ஆனைமலை ஆழியாறு அணையின் நீர்மட்டம் மே 26 நிலவரப்படி 65.4 அடியாக உள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக வினாட...