கொங்கு மண்டலத்தை குளிர்வித்த கனமழை

கோவை: கோவை, ஈரோடு உள்ளிட்ட கொங்கு மாவட்டங்களில் நள்ளிரவு முதல் விடிய விடிய கனமழை பெய்தது.


கோவை: கோவை, ஈரோடு உள்ளிட்ட கொங்கு மாவட்டங்களில் நள்ளிரவு முதல் விடிய விடிய கனமழை பெய்தது.

கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் கோடை வெயிலின் தாக்கம் அதிகம் காணப்பட்டு வருகிறது. இதனால், பகல் நேரங்களில் பொதுமக்கள் வெளியில் தலைகாட்ட முடியாத சூழல் நிலவி வருகிறது. நேற்றும் வழக்கம் போல, பகல் நேரங்களில் வெயில் வெளுத்து வாங்கியது. இதைத்தொடர்ந்து, மாலை நேரத்தில், குளிர் காற்று வீசியது. பின்னர், இரவில் பலத்த மழை பெய்யத் தொடங்கியது.

கோவை, ஈரோடு, திருப்பூர், சேலம் மற்றும் நீலகிரி உள்ளிட்ட கொங்கு மண்டலங்களில் விடிய விடிய மழை நீடித்தது. அதிகபட்சமாக சேலத்தில் 72 மி.மீ மழையும், ஈரோடு மாவட்டம் கோபியில் 49 மி.மீ மழையும், பெரியநாயக்கன் பாளையம் மற்றும் வடகோவை பகுதிகளில் 37 மி.மீ மழையும், கோவை விமான நிலையம் பகுதியில் 35 மி.மீ மழையும், நீலகிரி மாவட்டம் குன்னூரில் 17 மி.மீ மழையும் பதிவாகி உள்ளது.



Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...